டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு சங்பரிவார் அமைப்பினர் நடத்திய வன்முறையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்ட பாஜக தலைவர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய உத்தரவிட்ட நீதிபதி முரளிதர், பஞ்சாப் -அரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி வன்முறையைத் தொடர்ந்து காவல்துறையையும், மத்திய அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர் கேள்விகளை முன்வைத்தார்.
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு நேற்று உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 1984 இல் ஏற்பட்ட சீக்கிய கலவரத்தை போன்று மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
எப்ஐஆர் பதிவு செய்வதற்கு ஏற்படும் தாமதத்தை கண்டித்த நீதிபதி முரளிதர், எஃப் ஐ ஆர் பதிவு செய்வதற்குப் பொருத்தமான நேரம் வேண்டுமா? எப்ஐஆர் பதிவு செய்வதற்கு இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? நகரமே பற்றி எரிந்த பிறகா எப்ஐஆர் பதிவு செய்யப்படும்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா, அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து இன்று அந்த வழக்கை விசாரிப்பதாக ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். பிப்ரவரி 12ல் நடந்த கூட்டத்தில் உச்சநீதிமன்ற கொலீஜியம் செய்த பரிந்துரைப்படி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி முரளிதர் பணியிட மாற்றத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்துள்ளன.