தில்லியில் விநாயகர் சிலை கரைப்பின் போது நீரில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத் ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் தில்லியில் உள்ள பள்ளபக்தவார்பூர் கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கிராமமக்கள் உள்ள ஆற்றில் கரைக்க சென்றனர். அப்போது சிலையை கரைக்க ஆற்றின் ஆழமான பகுதிக்குள் சிலர் சென்றதால் ஆற்றின் நீரோட்டத்தின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அடித்துச்செல்லப்பட்ட 4 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.