tamilnadu

img

நாட்டை இந்து தேசமாக்குவதே ஆர்எஸ்எஸ்-ஸின் திட்டம்!

புதுதில்லி:
இந்தியாவை இந்து நாடு ஆக்குவதுதான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வேலைத்திட்டம் என்று அதன் தலைவர் மோகன்பகவத், மீண்டும் பகிரங்கப்படுத்தியுள்ளார்.தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிஒன்றில் அவர் மேலும் பேசியிருப்பதாவது:

“ஆர்எஸ்எஸ் என்பது ‘சங்பரிவார்’,‘சங் ஐடியாலஜி’ என்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறது. இவை அனைத்துமே முழுமையற்றவை. டாக்டர் ஹெட்கேவார் கூட ஆர்எஸ்எஸ் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டுவிட்டதாக எங்கும் கூறிக் கொண்டதில்லை. குருஜி கோல்வால்கர் கூட நீண்ட நாள் பிரச்சாரகராக இருந்த பிறகுதான் சங்கத்தைப் புரிந்துகொள்ளவே தொடங்க முடிந்தது என்றும் கூறுகிறார். ஆர்எஸ்எஸ் கோட்பாட்டாளர் என்றுயாருமே கிடையாது. சிர் அவ்வாறு சொல்லிக்கொண்டு மீடியாக்களில் தோன்றலாம். ஆனால், அனுமார், மராட்டிய மன்னன் வீரசிவாஜி மற்றும் ஹெட்கேவார் ஆகியோர்தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னோடிகள்.ஆர்எஸ்எஸ் அமைப்பைப் பொறுத்தவரை, அது இந்தியாவை இந்து தேசமாக்கும் இயக்கம் என்பதில் எந்த சமரசமும் கிடையாது. இந்துஸ்தான் என்ற இந்த நாடு ‘இந்து ராஷ்டிரம்’தான். இந்த உண்மையை நாங்கள் வாழ்க்கை முறையாக பெற்றிருக்கிறோம். இதை எங்களால் மாற்றிக் கொள்ள முடியாது. இந்த நாட்டில் ஒரேஒரு நபராவது தன்னை இந்து என்று அழைத்துக்கொள்ளும் வரை இது இந்துராஷ்டிரம் தான். இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.

;