tamilnadu

img

தனியார் ரயில்கள் விருப்பத்துக்கேற்ப கட்டணத்தை நிர்ணயிக்கலாம்: ரயில்வே வாரியம் தாராளம்

புதுதில்லி,பிப்.13- பயணிகள் ரயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் கூறுகையில், தனியாரால் இயக்கப்படும் பயணிகள் ரயில் களுக்கு கட்டண வரம்பு நிர்ண யிப்பது குறித்து இதுவரை அரசிடம் எந்த பரிசீலனையும் இல்லை. விமானப் போக்கு வரத்துத்துறையில் உள்ளது போல, பயணிகள் ரயில்களை இயக்கவிருக்கும் தனியார் ரயில்  நிறுவனங்கள் சந்தை நில வரத்தைச் சார்ந்து தாங்கள் விரும்பும் எந்தக் கட்டணத்தை யும் நிர்ணயித்துக் கொள்ளலாம். பயணிகள் நலன் கருதி இந்திய ரயில்வேயில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 1,500 முதல் 2000 ரயில்கள் இணைக்கப்பட வுள்ளது. அந்த அளவுக்கு கூடுதல்  ரயில்களை அரசால் நிர்வகிக்க முடியாது என்பதாலேயே தனி யாரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

;