புதுதில்லி, மார்ச் 23- கோவிட்-19 என்கிற கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளித்திட ஒரு நிதித் தொகுப்பை அறிவித்திட வேண்டும் என்று நிதியமைச்சரை எதிர்க்கட்சிகள் கோரிய போதிலும், இது குறித்து நிதி அமைச்சர் எதுவும் கூறாமலே, மக்களவை காலவரை யறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட் ட்த்தொடரின் இறுதி நாள் திங்களன்று மதியம் 2 மணிக்குக் கூடியது. கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவரு வதையொட்டி ஏற்பட்டுள்ள நிலைமை களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, 2020 ஆம் ஆண்டுக்கான நிதிச் சட்டமுன் வடிவு எவ்வித விவாதமுமின்றி நிறைவேற் றப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிதிச் சட்ட முன்வடிவை விவாதம் எதுவுமின்றி நிறை வேற்ற தயார் என்று கூறிய அதே சமயத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கொரோனா வைரஸ் தொற்றைச் சமா ளித்திட தனி நிதித் தொகுப்பு ஏற்படுத்த வேண்டும் என்று கோரினார்கள். ஆனால், நிதியமைச்சர் வெறுமனே மவுனம் சாதித்தார். இச்சட்டமுன்வடிவு நிறைவேறிய பின், தேசியப் பாதுகாப்பு பல்கலைக் கழ கத்திற்காக மேலும் இரு சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. மக்களவைக் கூட்டத்தொடர் முடி வுறும் தருவாயில் பிரதமர் அவைக்கு வந் தார். (ந.நி.)