tamilnadu

img

கொரோனா தடுப்பூசி நம்பிக்கை ஒளி பிறக்கிறது!

விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன் தகவல்

புதுதில்லி, ஜூலை 25- கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக அச்சுறுத் தல் செய்திகளை யே தந்துவரும் கொரோனா வைரஸ் குறித்து, நம் பிக்கை அளிக்கும் செய்தி வந்துள்ளது என மத்திய அரசின் விஞ்ஞான் பிரச்சார் நிறுவன விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறியுள்ளார். நாவல் கொரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோவேக் நிறு வனத்தின் கரோனாவேக், கேன்சினோ நிறுவனத்தின் ad5, இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்தின் AZD1222 ஆகிய மூன்று தடுப்பு மருந்து கள்-முதல் இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளைக் கடந்து மூன்றாம் நிலை மருத்துவ ஆய்வுக்கு முன்னேறி யுள்ளன. இந்தத் தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்ட ஆய்விலும் வெற்றியடைந்தால், அம்மை நோயை ஒழித்துக்கட்டியது போல் தடுப்பூசி மூலம் உலகை ஆட்டிப் படைத்த நாவல் கொரோனா வைரஸ் தொற்றை ஒழித்துவிடலாம் என்ற நம் பிக்கை துளிர்த்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புகழ்பெற்ற மருத்துவ ஆய்வு இத ழான ‘லான்செட்’டில் இதுதொடர்பான ஆய்வுக்கட்டுரை சமீபத்தில் வெளியா னது எனக் குறிப்பிடும் அவர், மேலும் கூறியிருப்பதாவது: சமவாய்ப்புள்ள இரட்டை மறைவு கட்டுப் படுத்தப்பட்ட சோதனை  (randomised double-blind control trial) எனும் ஆய்வுமுறையில் மேற் கண்ட மூன்று தடுப்பூசி பரிசோதனை களின் இரண்டு கட்ட ஆய்வுகளும்  நடத்தப்பட்டுள்ளன. தடுப்பூசியால் ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா, ஓரள வாவது தடுப்பாற்றல் தூண்டப்படு கிறதா என்பதை மதிப்பீடு செய்வது முதல் கட்ட மருத்துவ பரிசோதனை. தடுப்பூசியின் பயன் குறித்து இரண்டாம் கட்டம் கவனம் செலுத்தும்.

வைரஸ் தொற்றுக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் இயல் பாக வெளிப்படுத்தும் ‘பி’ செல், ‘டி’ செல் விளைவுகளைத் தடுப்பூசி ஏற் படுத்துகிறதா என மதிப்பீடுசெய்யப் படும். இதே கட்டத்தில் எந்த அளவு தடுப்பூசி தரவேண்டும், ஊக்கப்படுத் தும் டோஸ் தேவையா, எவ்வளவு நாட்கள் இடைவெளியில் ஊக்கப் படுத்தும் டோஸ் தரவேண்டும் என்பது போன்ற தகவல்களும் சேகரிக்கப் படும். மூன்றாவது கட்டத்தில் பல ஆயி ரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு எல்லா வயதினரிடமும் பல்வேறு உடல்நல நிலைகளுடன் காணப்படு பவர்களிட மும் தடுப்பூசியின் செயல்திறன் உறுதி செய்யப்படும்.

மூன்றாம் கட்ட ஆய்வில் கரோனாவேக்

சீனாவின் ‘சினோவேக் பயோ டெக்’ நிறுவனம், செயலிழந்த வைர ஸைக் கொண்டு உருவாக்கப்பட்ட கரோனா வேக் (CoronaVac) தடுப்பூசி யில் முதல், இரண்டாம் கட்ட சோதனை கள் முடிந்துள்ளன. மொத்தம் 743 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் குறிப் பிடத்தக்க அபாயகரமான பக்கவிளை வுகள் ஏதுமில்லை. எதிர்பார்த்தபடி மனிதர்களின் உடலில் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றலை தடுப்பூசி தூண்டுகிறது எனவும் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

மூன்றாம் கட்டத்தில் ஆயிரம் தன் னார்வலர்களை ஈடுபடுத்தி, அவர் களில் சரி பாதி பேருக்குத் தடுப்பூசி தரப்படும். மற்றவர்களுக்குப் ‘பிளா சிபோ’ எனப்படும் பாசாங்கு மருந்து தரப்படும். தடுப்பூசித் திறனுடன் வேலை செய்கிறது என்றால், தடுப்பூசி தரப் பட்டவர்களுக்கு நோய் தொற்று ஏற்படக் கூடாது. ஆனால், பிளாசிபோ மருந்துத் தரப்பட்டவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் தூண்டுதல் ஏற்பட்டு இருக்காது என்பதால் நோய் தொற்று ஏற்படும். இரண்டு குழுக்களிலும் எவ்வ ளவு பேருக்கு இயல்பில் கொரோனா தொற்று ஏற்படுகிறது எனக் கண்கா ணித்து, தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பீடு செய்வார்கள். கொரோனா தொற்று காட்டுதீ போல் பரவி வருவ தால் ஐம்பது சதவீத நபர்களுக்குத் தடுப்பாற்றல் ஏற்பட்டாலும், தற்காலிக அனுமதி அளிக்கலாம் என அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளது.

சீனாவில் கொரோனா தொற்று கணி சமாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அங்கே பரிசோதனை நடத்துவது கடி னம். எனவே, பல்வேறு தரப்பினரிடம் பரிசோதனை நடத்தி தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பீடு செய்வ தற்காகப் பிரேசிலின் சுகாதாரக் கட்டுப்பாடு மையமான ‘அன்விசா’ வுடன் (Anvisa) சீன நிறுவனம் ஒப்பந் தம் செய்துகொண்டுள்ளது. இந்த மூன் றாம் கட்ட ஆய்வு ஜூன் 29 அன்று தொடங்கியுள்ளது.

நவீனத் தடுப்பூசிகள்

விரும்பிப் பார்க்கும் திரைப்படத் தின் நடுவே விளம்பரங்களை இணைத்துத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது ஓர் உத்தி. அதேபோல், சாதாரண சளிக்காய்ச்சல் ஏற்படுத்தும் அடினோ வைரஸ் மரபணுத் தொகுதி யின் ஊடே கொரோனா வைரஸின் ஈட்டி முனைப் புரதம் தயார்செய்யும் மரபணு வைப் புகுத்தி, மரபணு மாற்றத் தடுப் பூசி தயாரிக்கலாம். சீனாவின் ‘கேன் சினோ பயலாஜிகல்’ நிறுவனம் தயா ரித்துள்ள Ad5 தடுப்பூசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் - அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள AZD1222 என்ற தடுப்பூசியும் அடி னோவைரஸை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மரபணு மாற்றத் தடுப்பூசிகள்தாம்.

முதல் கட்ட மருத்துவ ஆய்வில் 108 பேரிடம் Ad5 தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவு மார்ச் 2020 வெளியிடப்பட்டது. பின்னர் 8 வயது முதல் 83 வயதுடைய 508 பேரி டம் இரண்டாம் கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டன. சடுதியில் ஆய்வு களைச் செய்ய வேண்டும் என்பதற்காக முதல் இரண்டு கட்டங்களை இணைந்து ஒரேடியாக 1,077 பேரிடம் இங்கி லாந்தின் AZD1222 தடுப்பூசி பரி சோதனை செய்யப்பட்டது. இந்தப் பரி சோதனையில் 18 வயது முதல் 55 வய துடைய நபர்கள் மட்டுமே உட்படுத்தப் பட்டனர்.  இரண்டு தடுப்பூசிகளும் சுமார் 85-90% பேரிடம் ‘டி’ செல், ‘பி’ செல் நோய்த் தடுப்பாற்றல் வினையைத் தூண்டி, எதிர்பார்த்ததைவிடச் சிறப் பாகச் செயல்பட்டுள்ளன. இரண்டு தடுப்பூசிகளிலும் ஆபத்தான பக்க விளைவுகள் இல்லை. முதல் முறை செலுத்திய பின்னர், சில நாள் கடந்து ஊக்கப்படுத்தும் டோஸ் கொடுத்தால், தூண்டப்படும் தடுப்பாற்றல் மேலும் வலுவடைகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த இரண்டு தடுப்பூசி களும் அடுத்த கட்ட ஆய்வுக்கு வெகு விரைவில் செல்லும். இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு முடிவு வெளிவர மூன்று, நான்கு மாதம் ஆகும். அதன் பின்னர் பர வலாக விநியோகிக்கப் பெருமளவில் உற்பத்திசெய்ய வேண்டும். எனவே, இந்தத் தடுப்பூசிகள் பொதுப் பயன் பாட்டுக்கு வருவதற்கு இன்னும் 10 முதல் 12 மாதங்கள் ஆகலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.