லக்னோ:
ஹத்ராஸ் பாலியல் வன்கொலை சம்பவத்தில், குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு ஆரம்பம் முதலே பாஜக தலைவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, இறந்துபோன 19 வயதுதலித் இளம்பெண்ணுக்கு, ஹத்ராஸ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவருடன், ‘தொடர்பு’ இருந்ததாக அவதூறு சேற்றை அள்ளி இறைத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி நகர பாஜக தலைவரான ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா, இதுகுறித்து பகிரங்கமாகவே பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுகொல்லப்பட்ட இளம்பெண், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ரவி, ராம்குமார், சந்தீப், லவ் குஷ் ஆகிய4 பேர்களில் ஒருவருடன் ‘தொடர்பில்’இருந்துள்ளார். சம்பவம் நடந்த நாளன்றும், அந்த நபரை இளம்பெண் வயல்வெளிக்கு அழைத்துள்ளார். ஆனால், இது பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்துபோனதால் அவர்களே தங்கள் பெண்ணை கொன்று விட்டதாக கூறப்படுகிறது. மற்றபடி இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என்று தன்னால் உறுதியாக கூற முடியும்”என்று ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.பா
ஜக தலைவர் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா-வின் இந்த மட்டரகமான அவதூறுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஸ்ரீவஸ்தவா மீதே44 கிரிமினல் வழக்குகள் இருக்கும் நிலையில், அவரிடம் யாரும் நற்சான்றிதழ் கேட்கவில்லை; தலித் பெண்ணின் நடத்தையை கேள்விக்கு உட்படுத்த ஸ்ரீவஸ்தவாவிற்கு யோக்கியதை இல்லை என்று பலரும் கண்டித்துள்ளனர்.