இவ்வாண்டு அக்டோபர் 17ஆம் தேதியன்று இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் தனது நூறாவது ஆண்டில் நுழைந்துள்ளது என்பதை காணும் போது ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மட்டற்ற மகிழ்ச்சி அடைவர். சரியாகச் சொன்னால் 1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதியன்று அன்றைய புரட்சிகர ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய தாஷ்கண்ட் நகரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது என்பது பெருமைக்குரியச் செய்தியாகும்.
ஒரு கேள்வி எழுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பரந்துபட்ட இந்திய நாட்டில் முதல் கம்யூனிஸ்ட் கிளை உருவாகா மல் தாஷ்கண்ட் நகரில் உருவானது ஏன்? என்ற கேள்வி எழுவது இயற்கையே. அதற்கு விடை காண வேண்டுமென்றால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து இந்திய அரசியல் வரலாற்றை காண்பது அவசியம். சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவின் வங்காள மாகாணத்தில் தேசிய இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. ஆங்கிலேய ஆட்சி ஒழிய வேண்டும், நாடு விடுதலை யடைய வேண்டும் என்ற முழக்கம் அந்த வங்காள மாகாணம் முழுவதும் எதிரொலி த்தது. எட்டு கோடி மக்களைக் கொண்ட அந்த மாகாணத்தில் மூன்றேமுக்கால் கோடிப் பேர் முஸ்லிம்கள். நாலேகால் கோடி பேர் இந்து க்கள். இந்த இரண்டு பகுதியினரும் தேசிய இயக்கத்தில் மிகுந்த ஒற்றுமையோடு ஈடுபட்டிருந்தனர்.
அன்று வங்காள மாகாண ஆளுநராக இருந்த கர்ஸன் பிரபு என்பவர் இந்த இந்து முஸ்லிம் ஒற்றுமையைக் கண்டு அஞ்சினார். இந்த உணர்வு நாடு முழுவதும் பரவினால் அது எதிர்காலத்தில் இந்தியாவின் ஆங்கி லேய ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் என்று அஞ்சி ஒரு சதித் திட்டம் தீட்டினார். முஸ்லிம் கள் அதிகம் வசிக்கும் கிழக்கு வங்காளம் என்றும், இந்துக்கள் அதிகம் வசிக்கும் வங்காளம் என்றும் அந்த வங்காள மாகா ணத்தை 1905ஆம் ஆண்டில் பிரித்தார். இது அந்த வங்க மக்கள் அனைவரையும் கொதித்தெழச் செய்தது. குறிப்பாக வாலி பர்களை, மாணவர்களை மற்றும் அறிவுஜீவி களை ஒரு அதிரடி நடவடிக்கைக்கு இட்டுச் சென்றது. இந்த ஆங்கிலேய ஆட்சியை அமைதியாக எதிர்த்து விரட்ட முடியாது. அவ ர்களை விரட்ட ஆயுதமேந்த வேண்டும், வெடி குண்டுகள் செய்ய வேண்டும். ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொல்ல வேண்டும் போன்ற பயங்கரவாத போக்கிற்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக அனுசீலன் சமிதி, ஜூகாந்தர் குழு போன்ற பயங்கரவாதக் குழுக்கள் தோன்றின. ஏராளமாக வெடி குண்டுகள் செய்யப்படலாயின. அரசாங்க உயர் அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் போக்கு அதிகரித்தது. இதன் விளை வாக பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தூக்கில் போடப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். இவையனைத்தும் அந்த இயக்கத்தை ஒடுக்க முடியவில்லை. மாறாக, புதிது புதிதாக ஏராளமான இளைஞர்கள் இந்த பயங்கரவாத இயக்கத்தில் பங்கெடுக்களாயினர்.
பல ஆண்டு காலம் கடும் சிறை வாசம் அனுபவித்து விடுதலையான இந்த இயக்கத் தைச் சார்ந்த அறிவு ஜீவிகள் பலர் இந்தியாவி லிருந்து கொண்டு இந்த ஆங்கிலேய ஆட்சி யை வீழ்த்த முடியாது, அதற்கு ஆங்கிலேயரின் எதிரி நாடான ஜெர்மனிக்குச் சென்று அந்த அரசாங்கத்தின் உதவியுடன் ஆயுதங்கள் சேகரித்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, பலர் அங்கே சென்றனர். இவர்களில் வங்காளத்தவர் மட்டுமல்ல, வங்காள எழுச்சி யால் ஈர்க்கப்பட்ட, பயங்கரவாத மனோபாவம் கொண்ட பிற மாநிலத்தவர் பலரும் இந்த முடிவுக்கு வந்தனர். இவ்வாறு வங்காளத்தைச் சேர்ந்த எம்.என்.ராய், அரவிந்த கோஷ், அபனி முகர்ஜி, சௌகத் உஸ்மானி, பூபேந்திர நாத் தத்தா போன்றோரும் வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, முகமது பரக்கத்துல்லா, சென்னையைச் சேர்ந்த எம்.பி.டி. ஆச்சார்யா, செண்பகராமன் பிள்ளை மற்றும் ராஜா மகேந்திர பிரதாப் போன்றோரும் ஜெர்மன் நாட்டிற்குச் சென்றனர். வேறு சிலர் இங்கிலாந்து அரசாங்கத்திற்கும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இடையிலான வேறுபாட்டை பயன்படுத்தி பாரீஸ் நகரத்திற்கும் புதுச்சேரிக்கும் சென்றனர்.
1914ஆம் ஆண்டில் துவங்கி 1918 ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப் போரின் போது, இந்தியாவின் இந்த பயங்கரவாத புரட்சி யாளர்களுக்கும், ஜெர்மனி அரசாங்கத் திற்கும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. இங்கி லாந்தின் எதிரி நாடான ஜெர்மனி நாட்டின் அரசாங்கம் இந்த இந்திய புரட்சியாளர் களுக்கு ஏராளமாக பணமும், ஆயுதமும் கொடுப்பது என்றும், அதைக் கொண்டு அவர்கள் இந்தியாவில் ஆயுதப் புரட்சியை நடத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது. ‘இந்திய - ஜெர்மன் சதி’ என்று அழைக்கப் பட்ட இந்தத் திட்டத்தின்படி கிழக்கிந்திய நாடு களில் ஆயுதப் புரட்சியை உருவாக்கும் பொறுப்பு எம்.என்.ராய்க்கு கொடுக்கப்பட்டது. அவருக்கு ஜெர்மன் அரசாங்கம் ஏராளமாக பணமும் கொடுத்தது. இந்தத் திட்டத்தின்படி அவர் இந்தோனேசியாவுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றார். அதன்பின் அவருடைய அமெரிக்க மனைவி எவ்லின் டிரெண்டுடன் மெக்சிகோ நாட்டிற்கு சென்று அங்கே இரண்டரை வருடங்கள் தங்கியிருந்தார். அந்நாட்டில் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினார்.
1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகத்தான ரஷ்ய புரட்சி லெனின் தலைமை யில் வெற்றி பெற்றபின் 1918ஆம் ஆண்டில் லெனின் மூன்றாவது அகிலம் என்ற கம்யூ னிஸ்ட் அகிலத்தை உருவாக்கினார். இதன் நோக்கம் முழுவதும் உலகில் மார்க்சியத்தை பரப்பி தொழிலாளிகளையும், இளைஞர் களையும், மாணவர்களையும் ஈர்ப்பது என் பதை முதன்மையான நோக்கமாக கொண்டி ருந்தது. அச்சமயத்தில்தான் எம்.என்.ராயை கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர்களில் ஒரு வரான பரோடின் என்பவர் மெக்சிகோவில் சந்தித்துப் பேசி மார்க்சியம் குறித்து அவருக்கு விளக்கினார். மார்க்சிய நூல்களைக் கொடுத்து அவரை படிக்க வைத்தார். இதன் மூலம் அவரை கம்யூனிஸ்ட் ஆதரவாளராக்கினார். பரோடினின் முக்கிய வேலை என்பது ஐரோப்பா முழுவதும் சென்று அங்குள்ள கல் லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற் றில் பயிலும் மாணவர்களில் முற்போக்கு சிந்த னையுள்ளவர்களை, அறிவுஜீவிகளை, புரட்சி கர போர்க்குணம் கொண்ட மாணவர்களை ஈர்ப்பது, அவர்களுடன் விவாதிப்பது, மார்க்சியத்தை அவர்களுக்கு விளக்கிக் கூறுவது, மார்க்சிய நூல்களை படிக்க வைப் பது, பின்னர் அவர்கள் குறித்து கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தகவல் அனுப்புவது, கம்யூ னிஸ்ட் அகிலம் அவர்களை மாஸ்கோ விற்கு அனுப்பும்படி கூறியவுடன் அவர்களை அங்கே அனுப்பி வைப்பது போன்றவற்றை அவர் செய்வார். அவ்வாறு மாஸ்கோ சென்ற வர்களுடன் கம்யூனிஸ்ட் அகிலத்தின் தலைவர்கள் விவாதித்து அவர்களுக்கு மார்க்சிய தத்துவார்த்தப் பயிற்சியளித்து, அவர் களை கம்யூனிஸ்ட் ஆக்கி அவர்கள் நாட்டிற்கே திருப்பி அனுப்புவார்கள். அவர்கள் தங்கள் நாட்டில் மார்க்சியத்தை பரப்புவார்கள். எம்.என்.ராய் குறித்து பரோடின், கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு தகவல் அனுப்பி யதும், உடனே அவரை மாஸ்கோவிற்கு அனுப்பும்படி அங்கிருந்து தகவல் வந்தது. ராயின் முன்முயற்சியால் மெக்சிகோ சோச லிஸ்டுக் கட்சி தன்னை கம்யூனிஸ்ட் கட்சி என்று மாற்றிக் கொண்டது. ராய் அக்கட்சி யின் சார்பில் மாஸ்கோ சென்றார். அதன்படி இப்பொழுது எம்.என்.ராயும், அவர் துணைவி யார் எவ்லின் டிரெண்ட்ராயும், மாஸ்கோ சென்றனர். அவர்கள் அங்குள்ள கம்யூனி ஸ்ட் அகிலத்தின் தலைவர்களால் நேசத்துடன் வரவேற்கப்பட்டனர்.
மாஸ்கோவில் 1919ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடை பெற்ற கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டா வது காங்கிரசில் (பேராயத்தில்) ராய் கலந்து கொண்டார். அதேபோல் கம்யூனிஸ்ட் அகி லத்தின் மேற்கு ஐரோப்பிய தலைமைக்குழு அனுப்பிய அபனி முகர்ஜி என்பவரும் இந்தி யாவின் சார்பாக பிரதிநிதியாக கலந்துகொண்டார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேராயத்திற்குப் பிறகு இந்தியப் புரட்சி யாளர்களை ஒன்றுதிரட்டி இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கும் பொறுப்பு எம்.என்.ராய்க்குக் கொடுக்கப்பட்டது. எம்.என்.ராய் இப்பொழுது தன்னைப் போலவே ரஷ்யாவிற்கு வந்திருந்த இந்திய புரட்சியாளர் எம்.பி.டி. ஆச்சார்யாவை தொடர்புகொண் டார். அதேபோல ரஷ்யப் புரட்சியால் ஈர்க்கப் பட்டு ரஷ்யாவிற்கு வந்திருந்த இந்தியப் புரட்சி யாளர்களான முகமது அலி மற்றும் முகமது ஷாபி சித்திக்கி ஆகியோரை தொடர்பு கொண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளையை தாஷ்கண்ட் நகரில் உருவாக்கி னார்.
இதில் பங்கு பெற்றவர்கள்:
1. எம்.என்.ராய், 2. எவ்லின் டிரெண்ட் ராய் (எம்.என்.ராயின் மனைவி), 3. அபனி முகர்ஜி, 4. ரோஸா பிட்டிங்காப் (அபனி முகர்ஜியின் மனைவி), 5. முகமது அலி, 6. முகமது ஷாபிக் சித்திக்கி, 7. எம்.பி.டி. ஆச்சார்யா. *பரீட்சார்த்த உறுப்பினர்களுக்கான கவனிப்பு காலம் மூன்று மாதங்களாகும். *முகமது ஷாபிக் செயலாளராகத் தேர்ந்தெடு க்கப்பட்டார்.
இந்த முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வருமாறு:
“மூன்றாவது அகிலம் பிரகடனம் செய்த கோட்பாடுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்கிறது என்பதுடன் இந்திய நிலைமைகளுக்கேற்றார் போல் ஒரு திட்டத்தை உருவாக்கும் பணியை செய்வது என்று உறுதிபூணுகிறது.
எம்.பி.டி. ஆச்சார்யா எம்.என்.ராய்
(தலைவர்) (செயலாளர்)
தாஷ்கண்ட் அக்டோபர் 17, 1920
இதுதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை தாஷ்கண்ட் நகரில் உருவான சுருக்கமான வரலாறு.