tamilnadu

img

மகனின் வேலைக்கு தந்தை போட்டி - எஸ்.சாம்பசிவன்

ரயில்வேயில் 1974 வேலைநிறுத்தத்துக்குப் பிறகு வாரிசு வேலைக்கு மூடுவிழா நடத் தப்பட்டது. அதன் பிறகு பல வருடங்க ளாக ரயில்வே ஊழியர்கள் வாரிசுக்கு வேலை வழங்கிட கேட்டு தொடர்ச்சியாக போராட் டங்களை நடத்தி வந்த போது, செப்டம்பர் -2010 முதல் வாரிசு வேலை, நிபந்தனைகளுடன் ‘லார்ஜஸ் திட்டம்’ என்ற பெயரில் வழங்கப் பட்டது. இன்சினியரிங்கில் டிராக்மேன்களுக்கும், ஓடும் தொழிலாளர்களுக்கும், ஜி.பி.1900 வாங்கும் மற்ற டிபார்ட்மெண்ட் தொழிலாளர்க ளுக்கும் கிடைக்கப் பெற்றது.  ‘லார்ஜஸ் திட்டம்’ அமலாவதினால் மற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும், தேர்வு மூலம் தான் வேலை வழங்க வேண்டும் என்றும் வட மாநிலங்களில் போடப்பட்ட வழக்கின் விளைவாக வந்த நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில் 2017 - ல் லார்ஜஸ்  திட்டத்திற்கும் மூடு விழா நடத்தப் பட்டது. 

தேர்வின் மூலம் தான் வேலை வழங்க வேண்டும்  என்றும், அதனால் வாரிசுக்கு வழங் கப்பட்ட வேலையை நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி லார்ஜஸை ரத்து செய்த நிர்வாகம், 2393 குரூப் டி காலியிடங்களுக்கு தேர்வே இல்லா மல் காண்ட்ராக்ட் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 2393 காலியிடங்கள் முழுவதை யும் நிரப்பிட  உத்தரவு போட்டது எப்படி? படித்து முடித்த இளைஞர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய வேலையை ஓய்வு பெற்ற ராணு வத்தினருக்கு கொடுத்து இளைஞர்களுக்கு வேலை மறுப்பது  எந்த வகையில் நியாயம்? இது நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதில்லையா?  நிரந்தர வேலையை ஒப்பந்த வேலையாக நிர்வாகமே மாற்றி, கூலியைக் குறைத்து அரசு வேலையே இல்லாமல் ஒழிப்பது சரி தானா? 2009 முதல் பயிற்சி பெற்று வேலைக்காக காத்தி ருக்கும் அப்ரண்டீசுகளுக்கு வேலை வழங்கா மல் முழுவதையுமே ராணுவத்தினருக்கு கொடுப்பது ஒரு கண்ணில் வெண்ணெய் மறு கண்ணில் சுண்ணாம்பு இல்லையா? குரூப் டீ காலியிடங்களை நிரப்பும் போது குறிப்பிட்ட சதவீதம் ராணுவத்தினருக்கும் மற்ற சதவீதம் படித்த இளைஞர்களுக்கும் கொடுத்திருக்க லாமே! 

காண்ட்ராக்ட் வேலையை காண்ட்ராக்ட் ஊழியர்களுக்கு கொடுப்பது போல நிர்வா கமே காண்ட்ராக்ட் ஊழியர் வேலைகளை கொடுப்பது எந்த சட்டத்தில் உள்ளது?  இதன் விளைவு படித்து முடித்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, இளைஞர்களுக்கு கிடைக்கக் கூடிய மத்திய அரசு வேலையை தந்தையே காண்ட்ராக்ட் ஊழியராக போட்டி போட்டு மகனுக்கு கிடைக்கக்கூடிய வேலையை கெடுப்பது போல இல்லையா? மகனின் வேலைக்கு தந்தையே போட்டியா? இது போன்று குடும்ப உறவுகளில் பிளவையும், பிரச்சனைகளையும் இளைஞர்களுக்கு கிடைக்கிற வேலையில் போட்டியை உரு வாக்கி குறைந்த கூலிக்கு வேலையை உரு வாக்குவதும் மோடி அரசின் சகுனி வேலை தானே! \

நாடாளுமன்றத் தேர்தலுக்காக ரயில்வே யில் உள்ள சேப்டி கேட்டகிரி உட்பட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை  உடனடியாக நிரப்புவோம் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். தேர்தல் முடிந்து 100 நாட்கள் நெருங்கிய போதும் காலியிடங்களை நிரப்ப தேர்வை நடத்த, எந்த  அறிவிப்பும் இல்லை. தேர்த லுக்காக 5 வருடங்களாக நடத்தாமல்  இருந்த ஆர்ஆர்சி தேர்வை நடத்தினார்கள். இப்போது தேர்தலுக்கு பிறகு  எந்த தேர்வையும் நடத்த பிஜேபி அரசு தயாரில்லை.  இதற்கிடையே இன்ஜினியரிங் கேட்டு களில் காண்ட்ராக்ட் முறையில் முன்னாள் ராணு வத்தினரை பணி நியமனம் செய்தார்கள். அப்போதே டிஆர்இயூ மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன இயக்கங்கள் நடத்தியது. ஆனால் மற்ற பெடரேஷன்களோ இந்த காண்ட்ராக்ட் நியமனம் பற்றி மூச்சு விடவில்லை. இப்போது இந்த காண்ட்ராக்ட் விஸ்வரூபம்  எடுத்துள்ளது.

தென்னக ரயில்வேயில் குரூப் டி காலியி டங்கள் ஆர்ஆர்சி தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வந்தது முடிவுக்கு வந்து விட்டது. ஷெட், ஷாப், கேட், டிராபிக்கில் பாயிண்ட்ஸ்மேன் -பி, சிக்னல் போன்றவற்றிலுள்ள குரூப் ‘டி’ 2393 காலியிடங்களை ஆர்ஆர்சி தேர்வு நடத்தப் படாமல் காண்ட்ராக்ட் மூலம் காண்ட்ராக்ட் ஊழியர்களாக முன்னாள் ராணுவத்தினரை நியமிப்பதற்கு தென்னக ரயில்வே  உத்தரவு வெளியிட்டுள்ளது. 2019 இல் ஆர்ஆர்சி மூலம் 3596 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப் பட்டது. ஆனால்  இப்போது 2393 காலியிடங்க ளுக்கு தேர்வு நடத்தப்பட போவதில்லை. காண்ட்ராக்ட் ஊழியர்களாக முன்னாள் ராணு வத்தினர் (வயது 50), கட்டாயமாக ராணுவத்தில் 15 வருடங்கள் பணி முடித்து இருக்க வேண்டும்  என்ற தகுதியில் தேர்வு நடத்தப்பட உள்ளது. மாத  ஊதியம் ரூ. 23,968--27,072 என்ற முறையில் விண்ணப்பங்கள்  ஆன்லைன் மூலமாக செப்டம்பர் 12-2019 க்குள் வரவேண்டும் என்று டெண்டர் விடப்பட்டுள்ளது. இனிமேல் நிரந்தர ஊழியர்கள் தேர்வு செய்யப்படப்போவதில்லை. யாரும் நிரந்தர ஊழியர்களாகவும் இருக்க மாட்டார்கள். 

குரூப் டி காலியிடங்கள் அனைத்தும் காண்ட்ராக்ட் மூலம் நிரப்பப்படுவதை டிஆர்இயூ ஏற்றுக் கொள்ளாது. அதிலும் முழு இடங்களையும் முன்னாள் ராணு வத்தினரை கொண்டு நிரப்புவதிலும் நமக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், முன்னாள் ராணுவ வீரர்கள்  15 வருடங்கள் பணி முடித்து பென்ஷனுடன் ஓரளவு வாழ்க்கை பாது காப்புடன் வாழ முடிகிறது. ஆனால் எந்த  வாழ்க்கை பாதுகாப்புமில்லாமல், வேலை இல்லாமல் படித்த  இளைஞர்கள் வாழ்வதற்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். முழு காலியிடங்களையும் முன்னாள் ராணுவத்தின ருக்கு தாரை வார்ப்பதை நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என்று  அனைவரும் எதிர்பார்க்கின் றனர்.  ரயில்வேயில் நடக்கின்ற தனியார்மயம், நிரந்தர பணி ஒழிப்பு  இதற்கு  எதிராக ரயில்வே யில்  உள்ள தொழிற்சங்கங்கள் மட்டுமே போராடி தடுக்க முடியாது. மக்கள் போராட்டங் களும் அரசியல் சார்ந்த போராட்டங்களும் இணைந்திடும் போதுதான்  தனியார்மயத்தை தடுக்க முடியும்.

கட்டுரையாளர்: டிஆர்இயு மண்டல 
உதவித் தலைவர்