tamilnadu

img

படுதோல்வி அடைந்தது பிரதமர் மோடியின் கர்ஜனை

மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக. 20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம்

புதுதில்லி, ஜூலை 28- நாடு முழுவதும் கொரோனா தொற்று  பர வலையும் மரணங்களையும் கட்டுப்படுத்து வதில் நரேந்திர மோடி அரசு முற்றாக தோல்வி யடைந்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சாடியுள்ளது. இதை அம்பலப்படுத்தும் விதமாகவும் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் ஆகஸ்ட் 20 - 26 தேதிகளில் அகில இந்திய எதிர்ப்பு வாரம்  கடைப்பிடிக்குமாறு கட்சியின் அனைத்துக் கிளைகளுக்கும் மத்தியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழுக் கூட்டம் முதன்முறையாக இணை யத்தின் வழி (ஆன்லைனில்) ஜூலை 25-26 தேதிகளில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலை கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் பேசினார்.

சீத்தாராம் யெச்சூரி பேட்டி

சிபிஎம் மத்தியக்குழு அறைகூவல்

அப்போது, எந்தவித திட்டமிடலும் இல்லா மல் ஊரடங்கை அமலுக்கு கொண்டுவந்த பிரதமர் நரேந்திர மோடியின் கர்ஜனைகள் அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார். “பிரதமர் நரேந்திர மோடியின் திடீரென்று, எவ்விதத் திட்டமிடலும் இல்லாது, ஒரு தலைப் பட்சமாக அறிவித்த சமூக முடக்கம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைப்பரவாது கட்டுப்படுத்துவதில் வலுவிழந்திருப்பது நிரூ பிக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட  காலத்திற்கு  சமூக முடக்கத்தை அறிவித்த போதிலும் அத னைப் பயன்படுத்திக்கொண்டு, நம்முடைய சுகாதார வசதிகளைப் பெருக்கி, சுகாதார ஊழி யர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகர ணங்களை அளித்து, அதனைக் கட்டுப்படுத்து வதில் படுதோல்வி அடைந்திருக்கிறது” என்று குறிப்பிட்ட சீத்தாராம் யெச்சூரி, “கொரோனா  வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டு மானால், அதற்கு சுகாதார ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை அளித்திருக்க வேண்டும், நாட்டு மக்களிடையே விரிவான அளவில் சோதனைகள்   செய்திருக்க வேண்டும், ‘பாசிடிவ்’ என கண்டுபிடித்தவர்களைத் தனி மைப்படுத்தி இருக்க வேண்டும்.  இவ்வாறு அறிவியல் நடைமுறைகள் எதனையும் கடைப் பிடிக்காமல், பிரதமர், மகாபாரத யுத்தத்தைக் குறிப்பிட்டு, நாம் 21 நாட்களில் வெற்றியை எய்திடுவோம் என்று கர்ஜித்தது முற்றிலுமாக படுதோல்வியடைந்துவிட்டது” என்றும் கூறினார். தற்போது இதன் பாதிப்புகளை மாநில அரசாங்கங்களும், மக்களும் தாங்களாகவே பார்த்துக்கொள்ளட்டும் என்று கூறி மத்திய அரசு தனது பொறுப்புகளிலிருந்து முற்றிலு மாக, கைகழுவி விட்டுவிட்டது என்றும் சீத்தா ராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.

ஆர்எஸ்எஸ்/பாஜக வெறித்தனம்

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப் படுத்துவதற்குப் பதிலாக, ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சிநிரலையும் நவீனதாராள மயப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கை களையும் வெறித்தனமாக முன்னெடுத்துச் செல்வதற்கு மோடி அரசு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்த சீத்தாராம் யெச்சூரி, இவற்றின் மூலம் நாட்டின் சொத்துக்களை ஒட்டுமொத்தமாக சூறை யாடக்கூடிய விதத்திலும், உழைக்கும் மக்க ளின் மீதான தாக்குதல்களைப் பன்மடங்கு அதி கரிக்கும் விதத்திலும் பொருளாதார நடவடி க்கைகளில் இறங்கியிருக்கிறது என்றும் சாடினார்.

ஆகஸ்ட் 20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரம் கடைப்பிடிக்க அறைகூவல்

இத்தகைய மோடி அரசின் மக்கள்விரோத நடவடிக்கைகளை எதிர்த்தும், கொரோனா எதிர்ப்புப் போரில் அதன் படுதோல்வியை அம் பலப்படுத்தும் விதமாகவும், நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை சாசனத்தை முன்வைத்து ஆகஸ்ட் 20 முதல் 26 வரை அகில இந்திய எதிர்ப்பு வாரம் கடை பிடிக்குமாறு கட்சிக்கிளைகள் அனைத்திற்கும் மத்தியக்குழு கூட்டம் அறைகூவல் விடுத்திருக் கிறது என்றும் சீத்தாராம் யெச்சூரி கூறினார். மேலும், ஆகஸ்ட் 9 அன்று (தமிழகத்தில் ஆகஸ்ட் 10 அன்று) மத்திய தொழிற்சங்கங் கள், விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் நடத்தவுள்ள “இந்தி யாவைப் பாதுகாப்போம்- இந்திய மக்களைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் கூடிய அகில இந்திய எதிர்ப்பு தினத்தையும் எழுச்சியோடு கடைப்பிடிக்குமாறு கட்சிக்கிளைகளுக்கு மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இதுதொடர்பாக கட்சியின் மத்தியக்குழு கூட்டத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையையும் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை சாசனம்

    ஆகஸ்ட் 20-26 அகில இந்திய எதிர்ப்பு வாரத்தையொட்டி கட்சியின் மத்தியக்குழு, மோடி அரசாங்கத்தின் முன்பு வைத்துள்ள 16 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை சாசனம் வருமாறு:

1.    வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்துக் குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு மாதந்தோறும் 7500 ரூபாய் உடனடியாக அளித்திட வேண்டும்.
2.    தேவைப்படுவோர் அனைவருக்கும் அடுத்த ஆறு மாதங்களுக்கு தனிநபர் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக அளித்திட வேண்டும்.
3.    மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தினை விரிவுபடுத்தி, ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும், உயர்த்தப்பட்ட ஊதியமும் வழங்கப்பட வேண்டும். இதேபோன்று                       நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டமும் பிரகடனம் செய்யப்பட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலையின்மை ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
4.    மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர் தொழிலாளர் (வேலைவாய்ப்பு மற்றும் பணிநிலைமைகள் முறைப்படுத்தல்) சட்டத்தை ரத்து செய்திடும் முன்மொழிவைத் திரும்பப்  பெற வேண்டும். மாறாக,             அச்சட்டத்தை மேலும் வலுப்படுத்திட வேண்டும். 
5.    மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி-யில்) குறைந்த பட்சம் 3 சதவீதம் பொது சுகாதாரத்திற்கு மத்திய செல வினத்தில் உயர்த்திட வேண்டும்.
6.   இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தை நீக்கியும், வேளாண் உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை (Agricultural Produce Marketing Committee Act) உணவு தானியங்களை மாநிலங்கள் விட்டு மாநிலங்களுக்குக்               கட்டுப்பாடு எதுவுமின்றி கொண்டுசெல்வதற்கு வகைசெய்யும் விதத்தில் திருத்தங்கள் கொண்டுவந்திருக்கும் அவசரச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
7.    அமலில் உள்ள தொழிலாளர்நலச் சட்டங்களை ஒழித்துக் கட்ட/திருத்த/நிறுத்திவைக்க மேற்கொண்டிருக்கும் முன்மொழிவுகளைத் திரும்பப் பெற வேண்டும்.
8.    பொதுத்துறை நிறுவனங்களை, குறிப்பாக ரயில்வேயையும், மற்றும் மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி, வங்கிகள்/இன்சூரன்ஸ், பாதுகாப்பு உற்பத்தித்துறைகளை தனியாரிடம் தாரை வார்க்கும்           முடிவுகளை ரத்து செய்ய  வேண்டும்.
9.    பிஎம்கேர்ஸ் என்ற ஒரு தனியார் அறக்கட்டளையின் பெயரில் வசூலித்துள்ள தொகைகளை, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளித்திட வேண்டும்.
10.கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக பேரிடர் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்தியிருப்பதால், இச்சட்டத்தின் ஷரத்துக்களின்படி தேசிய பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து         பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு தடவை நிதி உதவி அறிவித்திட வேண்டும்.   
11.    தலித்/பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் (ஊனமுற்றோ ருக்கும்) இட ஒதுக்கீடுகளைக் கறாராக அமல்படுத்திட வேண்டும். நிரப்பப்படாத காலியாக          இருக்கும் இடங்களையும் இவர்களைக் கொண்டு பணிநியமனம் செய்து நிரப்பிடவேண்டும்.
12.கல்லூரிகளில் இறுதியாண்டு படித்துவரும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கு அவர்களின் முந்தைய செமஸ்டர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்து, பட்டங்கள்           வழங்கிட வேண்டும்.
13.ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2019 ஆகஸ்டிலிருந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும். அனைத்து தகவல் தொடர்புகளையும் மீண்டும் அளித்திட       வேண்டும். மக்கள் சுதந்திரமாக போய் வர அனுமதித்திட வேண்டும்.
14.சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தேசத் துரோகப் பிரிவு ஆகியவற்றின்கீழ் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும்       அரசியல் கைதிகளை விடுதலை செய்திட வேண்டும்.
15. 2020 சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
16.தலித்துகளுக்கு எதிராக சாதிய வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும்  குடும்ப வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக் குற்றங்களில்     ஈடுபடுபவர்களுக்கு எதிராகவும், பழங்குடியினரை சுரண்டுபவர்களுக்கு எதிராகவும்  ஈடுபடும் கயவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் மீது வழக்கு தொடுத்து அவர்களைத் தண்டித்திட வேண்டும்.

இதர அம்சங்கள் : 4




 

;