‘டைம்ஸ் நவ்’ கருத்துக் கணிப்பில் தகவல்!
புதுதில்லி, பிப்.5- 70 தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை ‘டைம்ஸ் நவ்’ (Times Now) ஏடு வெளியிட்டுள்ளது. இப்சோஸ்நி (IPSOS) றுவனத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 54 முதல் 60 இடங்களை பெற்று தில்லியில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை தொடரும் என்றும், பாஜக 10 முதல் 14 இடங்கள் மட்டுமே பெற்று தோல்வி அடையும் என்றும் தெரிய வந்துள்ளது. காங்கி ரஸ் கட்சி இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குபலத்தை பொறுத்தவரை ஆம் ஆத்மிக்கு 52 சதவிகிதமும், பாஜக விற்கு 34 சதவிகிதமும், காங்கிரசுக்கு 4 சதவிகிதமும் இருக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சட்டப்பேரவைக் குத்தான் இந்த முடிவே தவிர, ஒரு வேளை நாடாளுமன்றத்திற்கு தற்போது தேர்தல் நடந்தால், அதில் 7 தொகுதிகளிலும் பாஜக-வே வெற்றி பெறும் என்றும் ‘டைம்ஸ் நவ்’ கூறி யுள்ளது. கடந்த மே மாதம் நடந்த நாடாளு மன்றத் தேர்தலில், பாஜக தில்லியில் 46 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. 7 தொகுதிகளையும் மொத்தமாக அக் கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.