tamilnadu

img

அரசமைப்புச் சட்டத்தை கூச்ச நாச்சமின்றி மீறிய செயல்

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

சீத்தாராம் யெச்சூரி கண்டனம்

புதுதில்லி, ஆக.6- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டும் நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டி ருப்பது அரசமைப்புச்சட்டத்தை மீறிய செயலாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரிகூறினார். இதுதொடர்பாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது: அரசாங்கமே ஆளுநர், உத்தரப் பிரதேச முதல்வர் முன்னிலையில் கோவில் கட்டுமானப்பணிகளை மேற் கொண்டிருப்பது இந்தியக் குடியர சின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பு களை மறுதலித்துள்ள நடவடிக்கை யாகும். இப்பணியை ஓர் அறக்கட்ட ளை மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மீறிய செயலுமாகும். பூமி பூஜை நடத்தியிருப்பது, பாபர் மசூதி இடிப்பை பின்தேதியிட்டு சட்ட பூர்வமாக்கியிருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு குறித்து உச்சநீதிமன்றம், மிக மோசமான சட்டமீறல் என்று குறிப் பிட்டிருப்பதுடன் இதனைச் செய்த வர்கள் தண்டனைக்கு உரியவர்கள் என்றும் தெரிவித்திருக்கிறது. அவ் வாறு எவ்விதமான தண்டனையும் வழங்கப்படுவதற்கு முன்பே கட்டு மானம் தொடங்கிவிட்டது.

பூமி பூஜை நிகழ்வு மக்களின் மத உணர்வுகளை, ஒருதலைப்பட்ச மாக அரசியல் நோக்கங்களுக் காக  அப்பட்டமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாகும். இது அரசமைப்புச்சட்டத்தை கூச்சநாச்ச மின்றி மீறிய செயலுமாகும். பூமி பூஜை நிகழ்வு தொடர்பாக பிரதமரின் அயோத்தி நிகழ்வு அரசின் தூர்தர்ஷன் மூலமாக உலகம் முழு வதும் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. இது கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் உறுதிசெய்கிறது. இந்த நிகழ்வு, மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வெளியிட்டுள்ள விதிமுறைகளையும் மீறிய செயலாகும். உள்துறை அமைச்ச கத்தின் விதிமுறைகளில் மதம்சார்ந்த  கூட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.

து. ராஜா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா கூறுகை யில்,  “பூமி பூஜை நிகழ்வும் மற்றும் அதில் ஆர்எஸ்எஸ் தலைவர் பங்கேற் றிருப்பதும் இந்த அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் நடத்திக் கொண்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார்.

 (ந.நி.)