tamilnadu

img

புதிய கல்விக் கொள்கை குறித்து  ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் மத்திய அரசு அறிவிப்பு

புதுதில்லி,ஆக,23- புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே கடைப்பிடிக்கப் படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில பள்ளிக்கல்வி செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.  இதன்படி புதிய கல்விக் கொள்கை தொடர்பாக  ஆகஸ்ட் 24 முதல்  31 ஆம் தேதி வரை பள்ளி  ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கருத்து தெரிவிக்கலாம்  என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் http://Innovateindia.mygov.in/nep2020 என்ற இணையதள முகவரியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த இணையதள முகவரியில் சென்று தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.