கொரோனா வைரஸ் எதிரொலி
சென்னை, மார்ச் 16- வைரஸ் எதிரொலியாக தமிழ கத்தில் அனைத்து கல்வி நிறு வனங்களையும் வரும் 31ந்தேதி வரை மூட அரசு உத்தரவு பிறப் பிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைர சால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிறு வரை 107 ஆக அதிகரித்து இருந்தது. 2 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர். திங்க ளன்று வரை 114 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலி யாக, எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான கல்வி நிறுவனங்களை மூட முன்பே உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந் தது. இதனைத் தொடர்ந்து தமிழ கத்தில் உள்ள அனைத்து கல்வி நிறு வனங்களையும் வரும் 31ந்தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்படும். பல்கலைக்கழகங்களும் செயல்படாது. அதேவேளையில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசு தேர்வுகள் மற்றும் நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடை பெறும். மருத்துவம் மற்றும் மருத்து வம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும். அங்கன்வாடி மையங்கள் மூடப்பட வேண்டும். இந்த குழந்தை களுக்கு 15 நாட்களுக்கு தேவை யான உணவு பொருட்களை அவர் களின் குடும்பத்தினரிடம் ஒப்ப டைக்க வேண்டும். அங்கன்வாடி மைய குழந்தைகளின் உணவை, வீட்டிற்கு சென்று ஊழியர்கள் வழங்க வேண்டும்.
பொதுமக்கள் திருமணங்கள், இதர சமூக விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்லா மல் அவற்றை தவிர்க்க வேண்டும். திருமண மண்டபங்களில் திட்ட மிட்ட நிகழ்வுகளை தவிர புதிய நிகழ்வுகளை நடத்த வேண்டாம்.
திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு அரங்கு களையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநாடு, ஊர்வலம், கருத்த ரங்கு நடத்த தடை விதிக்கப்படு கிறது. விடுமுறையையொட்டி சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிடவேண்டாம். தலைமை செயலகத்திற்கு வருவ தனையும் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கூடுவதை, அடுத்த 14 நாட்களுக்கு பொது மக்கள் தவிர்க்க வேண்டும். கோவில்கள், மசூதிகள், தேவா லயங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாநிலங்களில் இருந்து பேருந்தில் வருபவர்களும் இனி சோதனை செய்யப்படுவார்கள். அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும். அனைத்து உத்தரவு களும் செவ்வாய் முதல் நடை முறைக்கு வருகிறது.
விமானத்தில் தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி?
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் 24, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலிக்கு அடுத்தபடியாக ஈரானில் 725 பேரும், ஸ்பெயினில் 292 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரண மாக நியூயார்க்கில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை களுக்கு ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என அம்மாகாண ஆளுநர், ஜனாதிபதி டிரம்புக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளை ஒட்டிய தனது எல்லைப் பகுதிகளை திங்கள் காலை முதல் மூடுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ள நிலையில் 1,372 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 21-ஆக இருக்கிறது. 14,944 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 259 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். துபாய் வழியே விமானம் மூலமாக தமிழகம் வந்த 14 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகம் எழுந்தது .இதை தொடர்ந்து அவர்கள் பூந்தமல்லி அரசு பொது சுகாதார நிறுவனத்தில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.