புதுதில்லி,நவ.22- மத்திய ரயில்வே துறை ஆலோசனைக்குழுவில் தமிழக எம்.பி.க்கள் மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். 27 பேர் கொண்ட இந்த குழுவில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு. வெங்க டேசன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிமாணிக்கம், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தில் ரயில்வே துறை சார்ந்த தேவைகள், மேம்பாட்டு பணிகளில் ரயில்வேத்துறைக்கு ஆலோசனைகளையும், கருத்துக் களையும் வழங்குவர்.