இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையின் கீழ் வராது என்ற உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க கோரி அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தன. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அதில் இட ஒதுக்கீடை மறுப்பது அடிப்படை உரிமைகளை மறுப்பதாகும் என வாதிடப்பட்டது. அதற்கு பதிலளித்த நீதிபதிகள் இடஒதுக்கீடு அடிப்படை உரிமைகளின் கீழ் வராது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது. இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உச்சநுதிமன்றம் தெரிவித்துள்ளது.