tamilnadu

img

ஜார்க்கண்டில் காந்தி சிலை உடைப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகாத்மா காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி  உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்கர் டோலி என்ற இடத்தில் இருந்த  காந்தி சிலை தேசப்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிறன்று காலை சிலை உடைந்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். 
காவல் துறையினர் நடத்திய விசாரணையில்  நள்ளிரவில் சமூக விரோதிகள் சிலர் சுத்தியலால் காந்தி சிலையை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த சிலை சீரமைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.