tamilnadu

img

பாலிவுட் வாய்ப்புகளை சிலர் தடுக்கிறார்கள்... ஏ.ஆர்.ரஹ்மான்

புதுதில்லி, ஜூலை 26- பாலிவுட்டில் தனது வாய்ப்புகளை சிலர் தடுப்பதாக ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து ஒரு எப்.எம் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில், ‘என்னை சுஷாந்த் சிங் நடித்ததில் பெச்சாராவின் இயக்குனர் முகேஷ் சோப்ரா அணு கினார். அப்போது அவர் என்னிடம் சொன்னது என்னை அதிர்ச்சிக்குள் ளாக்கியது. பலரும் அவரிடம் ரஹ்மான் பின்னால் செல்ல வேண்டாம் என்று கூறியிருந்தார்கள். நல்ல திரைப்படங்கள் ஏன் என்னிடம் வர வில்லை என்பதை அப்போது தான் நான் உணர்ந்தேன் என ரஹ்மான் கூறினார். நல்ல திரைப்படங்கள் வேண்டாம் என நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஆனால் தவறான புரிதல் காரணமாக சிலர் தவறான பிரச்சாரம் செய்கி றார்கள். பாலிவுட்டில் சிலர் தன்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பு கிறார்கள். இந்த வகையான போலி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மிகச் சில படங்களே தன்னிடம் வருவதாகவும் ரஹ்மான் கூறினார்.

;