கொல்கத்தா:
எனது வீட்டில் பணியாற்றியவருக்கு கொரோனாபாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.மேற்குவங்கத் தில் கொரோனா சமூக பரவலாகிவிட்டது என்று மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது வீட்டில் எனக்கு சனிக்கிழமையன்று தேநீர் வழங்கிய ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று எனது அலுவலகத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. ஆனாலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா சமூக பரவல் நிலையை எட்டி விட்டதை காட்டுகிறது. கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி னாலும் நம்மால் கொரோனாவின் பிடியில் இருந்து தப்ப முடியவில்லை” என்று தெரிவித்தார்.