புதுதில்லி, ஏப்.18- தில்லி பாஜக தலைமையகத்தில், செய்தியாளர் சந்திப்புக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது. பாஜக தலைவர்களான பூபேந்திர யாதவ், ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர். அப்போது திடீரெனஒருவர், பாஜக தலைவர் கள் மீது ஷூவை கழற்றிவீசியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரைமடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.