tamilnadu

img

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாது... உ.பி.பாஜக எம்.எல்.ஏ ஆணவப் பேச்சு

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றம்சாட்டியுள்ளன.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பல்லியா தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசாங்கம் தனது கைகளில் வாளை ஏந்தி இருந்தாலும் இதுபோன்ற (பாலியல் வன்கொடுமை) குற்றச்செயல்களை தடுக்க முடியாது என்று அலட்சியமாக பேசியுள்ளார். பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்குக் கலாச்சாரத்தையும், நற்பண்புகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி பெண் குழந்தைகள் அமைதியாக இருக்கவும் கற்றுக் கொடுக்கவேண்டும். அரசு எப்படி மக்களைக் காக்கவேண்டுமோ அதுபோன்று குழந்தைகளைப் பெற்றோர்கள் காக்க வேண்டும். அரசும் நல்ல பண்புகளும் இணைந்தால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று   சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.