tamilnadu

img

திருப்பதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள சந்தனமரம் கடத்தல்... 2 தமிழர்கள் கைது...

திருமலை 
சந்தனமரங்கள் அதிகம் உள்ள பகுதியான திருப்பதி, திருமலை மலைப் பகுதி ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு 100 சதுர கிமீ அளவிற்கும் அதிகமான எண்ணிக்கையில் சந்தன மரங்கள் உள்ளன. பல கோடி மதிப்புள்ள இந்த சந்தன மரங்களை வேட்டையாட தென்னிந்தியாவில் பல கொள்ளை கும்பல்கள் உள்ளன.

இந்நிலையில் திருப்பதி சேஷாசலம் பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள சந்தன மரங்களை கடத்தியதாக 2 தமிழர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

;