புதுதில்லி:
பொதுமுடக்கம் காரணமாக, இந்தியாவின் உள்நாட்டுசில்லரை வர்த்தகத்துறை, ரூ.9 லட்சம் கோடி அளவிற்கானவணிக இழப்பைச் சந்தித்துள் ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (CAIT)பொதுச்செயலாளர் பிரவீன்காண்டேல்வால் கூறியுள்ளார்.இதுதொடர்பாக பிரவீன் காண்டேல்வால் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் சில்லரை வர்த்தகம் கடந்த 60 நாட்களில்ரூ. 9 லட்சம் கோடி மதிப்புள்ள வணிகத்தை இழந்துள்ளது.தற்போது செய்யப்பட்ட தளர்வுகளுக்குப் பின்னரும், நாடுமுழுவதும் உள்ள கடைகள் மற்றும் வணிகச் சந்தைகள் சுமார் 5 சதவிகித வணிகத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்.மேலும் 8 சதவிகிதத் தொழிலாளர்கள் மட்டுமே கடைகளில் தங்கள் கடமைகளை மீண்டும் தொடங்க முடியும் நிலையில் உள்ளனர். மற்றொரு புறத்தில், ஜிஎஸ்டி வகையிலும், வர்த்தகர்கள் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு கொள்கை ஆதரவும் இல்லாத நிலையில், அவர்கள் தங்கள் வணிகத்தின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகின்றனர்.இதனால், உள்நாட்டு வர்த்தகம், தற்போது மிக மோசமான காலத்தை எதிர்கொள்கிறது. இவ்வாறு பிரவீன் காண்டேல் வால் கூறியுள்ளார்.ரூ. 9 லட்சம் கோடி வணிக இழப்பால், மத்திய மற்றும்மாநில அரசுகளும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான வரி வருவாயை இழந்திருப்பதாகவும் காண்டேல்
வால் தெரிவித்துள்ளார்.