tamilnadu

img

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ராஜினாமா


இந்திய ரிசர்வ்வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவிக்காலம் முடிய 6 மாதங்கள் இருந்தநிலையில்  ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
முன்னாள் ரிசர்வ்வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேலின் கீழ் பணியாற்றும் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி விரால் ஆச்சார்யா பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனிப்பட்ட சொந்தகாரணத்தினாலேயே ராஜினாமா செய்ததாக உர்ஜித் படேல் தெரிவித்தார். ஆனால்  நிதியமைச்சகத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானது. உர்ஜித் படேலைத் தொடர்ந்து மத்திய நிதி ஆணையக் குழுவின் உறுப்பினர் சக்திகாந்ததாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். உர்ஜித்படேலைத் தொடர்ந்து விரால் ஆச்சார்யா பதவி விலகுவார் என்று அப்போது தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் தெரிவித்தது. 
இந்நிலையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உள்விவகாரங்களில் தலையிடுவது சரியல்ல என விரால் ஆச்சார்யா பொது மேடையில் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பதவிக்காலம் முடிவடைய 6 மாதகாலம் இருக்கும் நிலையில் விரால் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.