டி.கே.ரங்கராஜன் எம்.பி., கேள்விக்கு மத்திய அரசு பதில்
புதுதில்லி, மார்ச் 6- மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாண வர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் 2019 டிசம்பர் 9 அன்று கேள்வி நேரம் முடிந்தபின்பு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.கே.ரங்கராஜன் கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக 2020 பிப்ரவரி 28 அன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், டி.கே.ரங்கராஜனுக்கு பதிலளித்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு: மருத்துவக் கல்வியை பொ றுத்தவரை மத்திய கல்வி நிறுவனங்களில், மத்திய கல்வி நிறுவனங்கள் (மாண வர் சேர்க்கையில் இடஒதுக் கீடு) சட்டம் 2006ன்படி இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கு அகில இந்திய கோட்டாவில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படை யில் 2007-2008 கல்வியாண்டு முதல் அகில இந்திய கோட்டாவில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 15 சதவீதம், பழங்குடி மாணவர்களுக்கு 7.5சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பொறுத்த வரை மாநிலத்திற்கு மாநி லம் வேறுபாடு இருக்கிறது; மருத்துவப் படிப்பில் இள நிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கையில் வெவ்வேறு மாநிலங்கள் வெவ்வேறு விதமான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றுவதால் அகில இந்திய கோட்டாவிற்கு அவை அளிக்க வேண்டிய இடங்களை அந்தந்த பிரிவி னருக்கு ஏற்றவகையில் அளிக்க முடியாத நிலை உள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு அளிப்பதை அந்தந்த மாநிலங்களின் பிரத்யேக சூழலுக்கு ஏற்ற வாறு வழங்குவதற்கு உரிய முறையில் சட்டம் இயற்றிக் கொள்ள சிறப்பு விதிகள் அனுமதிக்கின்றன.
மேலும், மத்திய கல்வி நிறுவனங்களைத் தவிர பிற கல்வி நிறுவனங்களில் மருத்துவக் கல்வியில் அகில இந்திய கோட்டாவின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக் கீடு அளிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணையின்கீழ் நிலுவை யில் இருக்கிறது. இவ்வாறு சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.