திருவண்ணாமலை, ஏப்.7- திருவண்ணாமலையில் மலையில் கடந்த 11 நாட்களாக தவித்த சீனப்பயணி மீட்கப்பட்டார். திருவண்ணாமலையில் உள்ள மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையில் வெளிநாட்டு நபர் ஒருவர் பதுங்கி இருப்ப தாக கிடைத்த தகவலின் பேரில், வனத்துறையினர் நேற்று முன் தினம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சீன நாட்டைச் சேர்ந்த 35 வயது யங்ரூயி என்ற இளைஞர், கடந்த 11 நாட்களாக மலை குகையில் மறைந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
பின்னர், மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு, திருவண்ணாமலை ரமண ஆசிரமம் முன்பு உள்ள சிறப்பு உதவி மையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து அவர், திருவண்ணாமலை அருகே அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது ரத்த மாதிரி சேகரித்து, கரோனா பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. சீன இளைஞரை காவல்துறை யினர் கண்காணித்து வருகின்றனர்.