tamilnadu

img

தேர்தல் விதிகளில் சீர்திருத்தங்கள் தேவை.... முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி கருத்து...

புதுதில்லி:
தேர்தல் விதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று முன னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்றத்தின் புகழ்பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ் ணய்யரின் பிறந்தநாள் விழாவில் குரேஷி கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். அந்த உரையில் தேர்தல் விதிகள் சீர்திருத்தம்குறித்து, அவர் பேசி உள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் பெற்றுள்ள வாக்கு எண் ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்கள் தேர்வு செய்யப் பட வேண்டும். கடந்த 2014 உ.பி.சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மொத்தம் 20 சதவிகித வாக்குகளைப்பெற்றது. ஆனால் ஒருவர் கூட  வெற்றி பெறவில்லை. இதன் மூலம் 20 சதவிகித வாக்காளர்களுக்கு பிரதிநிதி இல்லாத நிலை உண்டானது.இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.அதேபோல தேர்தல் கருத்துக் கணிப்புக்களைத் தடைசெய்ய வேண்டும். வாக்காளர்கள் மத்தியில் இந்த கருத்துக்கணிப்புக்கள் தாக்கம் செலுத்திஅவர்களின் முடிவை மாற்றி விடுகிறது. பல கருத்துக் கணிப்புக் கள் ஒருதலை பட்சமாக உள் ளன. இது வாக்காளர்களின் தனித்தன்மையை மிகவும் பாதிக்கிறது.தற்போது பல அதிகாரமற்ற மற்றும் போலிக் கட்சிகள் உள்ளன.  இதன் மூலம் பெரிய கட்சிகளின் கறுப்புப் பணம் வெள்ளைப்பணமாக மாற்றப்படுகிறது. இதைத் தடை செய்ய வேண்டும். இவ்வாறு குரேஷி கூறியுள்ளார்.