புதுதில்லி:
இந்திய ரயில்வே துறையை முற்றிலும் தனியார்மயமாக்க முடிவு செய்துள்ள மோடிஅரசு, முதற்கட்டமாக 151 பயணிகள் ரயில்கள் மற்றும் 109 வழித்தடங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அதற் கான விண்ணப்பங்களை பெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு எழுந்து கொண்டிருந்தபோதே, இந்தியாவிலுள்ள 7 ஆயிரம் பெரியரயில் நிலையங்களில் 15 சதவிகிதத்தை, சுமார் 700 முதல் 1,050 ரயில் நிலையங்களை தனியார் பராமரிப்புக்கு விடப் போவதாகவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.நாட்டிலுள்ள ரயில் நிலையங்களை, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் (Public Private Partnership - PPP),நவீன மற்றும் உலகத் தரம்வாய்ந்த ரயில் நிலையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கையே இது என்று மோடி அரசு குறிப்பிட்டது.அத்துடன் நிற்கவில்லை,ரயில் பயணக் கட்டணத்துடன், ரயில் நிலையங்களை பயன்படுத்துவதற்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப் படும் என்று அறிவித்து அதிர்ச்சிஅளித்தது.இந்நிலையில், மோடிஅரசு ஜூலை மாதம் அறிவித்த ரயில் பயன்பாட்டாளர் கட்டணத் திட்டம் விரைவில்நடைமுறைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரயில் நிலையப் பயன்பாட்டுக்குக் கட்டணம் வசூலிப்பதற்கு, அக்டோபரில் மத்திய அமைச்சரவை அனுமதிஅளிக்கும் என்றும், ரூ. 10முதல் ரூ. 35 வரை பயன்பாட் டாளர் கட்டணம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.அதாவது, AC 1-இல் பயணிப்போருக்கு 35 முதல் 40ரூபாய், AC 2 பயணிப்போருக்கு 30 ரூபாய், AC 3-இல் பயணிப்போருக்கு 25 முதல் 30 ரூபாய் மற்றும் ஸ்லீப்பர் கிளாஸில் (Sleeper Class) பயணிப்போருக்கு 10 ரூபாய்என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.புதுதில்லி, மும்பை சிஎஸ்டி, ஜெய்ப்பூர், நாக்பூர்,அகமதாபாத், ஹபீப்கஞ்ச், சென்னை, அமிர்தசரஸ் போன்ற பெரிய நிலையங்களை கட்டண வசூலிப்பிற்காக (Private Stations)ரயில்வே தேர்ந்தெடுத்துள்ளது.இங்கிருந்து பயணத்தைத் துவங்கும் ரயில் பயணிகள், இனிமேல் ரயில் பயணக் கட்டணம் போக, கூடுதலாக ரூ. 10 முதல் ரூ.35 வரைரயில் நிலையப் பயன்பாட்டுக்கட்டணம் செலுத்த வேண்டும்என்பது குறிப்பிடத்தக்கது.