புதுச்சேரி:
மறைந்த புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பாரதரத்னா வழங்க பிரதமரை வலியுறுத்துவேன் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டாலும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே தாமரைபாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவு கலை உலகத்துக்கு பேரிழப்பு. எஸ்பிபிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்துவேன்” என்றார்.
நினைவு இல்லம்
மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிர மணியத்துக்குதாமரைப் பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நினைவு இல்லம் கட்டப்படும் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.மேலும், எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய் யப்பட்ட இடத்தை பார்வையிட காவல் துறையிடம் ஆலோசித்து மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.