tamilnadu

img

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்புபவர்களுக்கு இ-பாஸ் வழங்கிடுக !

சென்னை, மே 4- தமிழ்நாட்டில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விரும்பும் அனை வருக்கும் இ-பாஸ் உடனடியாக வழங்ககிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதம் வருமாறு:

கொரோனா தடுப்பு ஊரடங்கு காரண மாக பல்வேறு மாவட்டங்களில் தங்கி யிருக்கும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு அவசரத் தேவைகளுக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டியவர்கள் கடந்த ஒரு மாதமாக அங்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு அதற்கான இ-பாஸ் இது வரை வழங்கப்படவில்லை என்பது தெரிய வருகிறது. எனவே, இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் செல்ல உடனே அதனை வழங்கிடுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், இ-பாஸ் பெறுவதற்கு இணையதளம் மூலமாக மட்டும்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பது சாதாரண மக்களுக்கு பெரும் பிரச்சனை யாக மாறும். பிரவுசிங் மையத்தில் கூட்டம் கூடுவதும், அதற்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப் படுவதுமே நடக்கும். அதைப்போன்று  ஒரே மாவட்டத்துக்குள் பயணிப்பதற்கு கூட விண்ணப்பங்கள் மாநில அளவில் மையப்படுத்தி பெறப்படு வது தேவையற்ற தாமதத்தை உரு வாக்கும். மருத்துவம், இறப்பு போன்ற  அவசர கால சூழலில் இத்தகைய தாமதம்  உயிரிழப்பை உருவாக்கும்.  மாவட்ட ஆட்சி யர்கள் நேரடியாக விண்ணப்பம் பெற்று அனுமதி அளிப்பது என்பது இதனை ஓரளவு தீர்த்து வைக்க உதவும். எனவே, இதை உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;