tamilnadu

img

ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்திப்பு

புதுதில்லி:
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் புதன்கிழமையன்று சந்தித்தனர்.ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்சிபிஐயால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.  சிபிஐ தொடர்ந்த வழக்கில், சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. ஆனால் அதே வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். 
இதனால், கடந்த  3 மாதமாக  திகார்சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தனக்கு ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமையன்று நடைபெற்றது. இந்நிலையில் புதன்கிழமையன்று காலை திகார் சிறைக்குச் சென்ற  காங்கிரஸ்முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும்பிரியங்கா காந்தி  ஆகியோர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேசினர்.

;