tamilnadu

தனியார் மய முயற்சியை... 1ம்பக்கத் தொடர்ச்சி

அனுப்பியதில் குறிப்பிட்டதற்கும் முற்றிலும் முரண்பட்டதாகும். மேற்கண்ட கடிதங்களில் ஆயுத உற்பத்தி ஆலைகளை கார்ப்பரேட் மயமாக்கினால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றியும், ஆபத்துக்கள் பற்றியும் அவரே தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் பத்திரிகை செய்தியில் நேர்மாறாக வெளியாகியுள்ள தலைவரின் அறிக்கை கடுமையான கண்டனத்திற்குரியது. ஆயுத உற்பத்தி ஆலைகளின் நிர்வாகத் தலைமைக்கோ, அதன் 82 ஆயிரம் தொழிலாளர்களுக்கோ அது ஏற்புடையதல்ல. ஆயுத உற்பத்தி ஆலைகளின் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் தலைவரின் இத்தகைய இரட்டை நிலைக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதுடன், தலைவரின் கருத்துக்களை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள். தொழிலாளர்கள் மீது அவருடைய கருத்தை திணிக்க முடியாது. என்ன காரணத்தினால் அல்லது அழுத்தத்தினால் அவர் தனது கருத்துகளை மாற்றிக் கொண்டார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.ஒருமாத வேலை நிறுத்தம் 41 ஆலைகளிலும் இரண்டாவது நாளாக புதனன்று வெற்றிகரமாக நீடிக்கிறது. பாஜக ஆட்சியின் தன்னிச்சையான முடிவினை நிராகரித்து வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பலரும் அளித்துள்ள வாக்குறுதிகளை மீறி கார்ப்பரேட்மயமாக்கும் முடிவை இன்றைய அரசு எடுத்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.