மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் வேளாண் விளை பொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றி உள்ளது.
மோடி அரசின் விவசாயிகள் விரோத மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ராத் கவுர் பாதல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வேளாண் மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், மசோதாக்களை நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளை கண்டு கொள்ளாத சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் நிறைவேறியதாக அறிவித்தார்.
இந்நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்ப தெரிவித்த நாடு முழுவதும் விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேளாண் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். தற்போது மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டமாக மாறி உள்ளது.