tamilnadu

img

பிரகாஷ் ராஜ் மீது தில்லி போலீசில் புகார்!

புதுதில்லி:
ராம்லீலா நிகழ்வை விமர்சித்து விட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.அண்மையில், தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், ‘ராம்லீலா’ நிகழ்வு குறித்து கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. ராம்லீலா நிகழ்ச்சியானது சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை பரப்புகிறது என்று குறிப்பிட்டதாக தெரிகிறது.வழக்கம்போல இந்துத்துவா சக்திகள் ஆத்திரமடைந்து விட்டன.சமூகவலைத்தளங்களில் நடிகர் பிரகாஷ் ராஜை மோசமாக விமர்சித்தஅவர்கள் இப்பிரச்சனையில் அவரை சும்மா விடமாட்டோம் என்றும் கொக்கரித்தனர்.ஆனால், “நான் எந்த மதத்துக்கும் எதிரானவன் அல்ல. மதத்தைத்தவறாக பயன்படுத்துவோருக்கு மட்டுமே நான் எதிரானவன்” என்றுவிளக்கம் அளித்த பிரகாஷ் ராஜ், “நான் இந்து மதத்துக்கு எதிரானவன் என்ற போலிச் செய்தியை எத்தனை காலத்துக்கு நீங்கள்பரப்புவீர்கள். மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் கலாச்சாரத்தையும் எவ்வளவு காலம்தான் தவறாக பயன்படுத்துவீர்கள்” என்றுமீண்டும் பதிலடி கொடுத்தார். இந்நிலையில், மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் பேசியதாக பிரகாஷ் ராஜ் மீது தில்லி திலக்மார்க் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
 

;