tamilnadu

img

காவல்துறையை ஏவி கர்நாடக பாஜக அரசு ரெய்டு ... எடியூரப்பா மகனின் ஊழலை அம்பலப்படுத்திய டிவி சேனல்..

பெங்களூரு:
கர்நாடக முதல்வர் எடியூரப்பா மற்றும் அவரது மகன்விஜயேந்திரா உள்ளிட்ட குடும்பத்தினரின் ஊழல் முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்த கன்னட டிவி சேனல் மீது, காவல்துறையை ஏவி ரெய்டு நடத்தப் பட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கி வருவது’பவர் டிவி’ (Power TV) என்ற கன்னட சேனல் ஆகும். இந்த நிறுவனம், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக ஆதாரங்களைச் சேகரிக்க ஸ்டிங் ஆபரேஷனில் ஈடுபட்டது. 

அதில் கட்டுமான நிறுவனம்ஒன்று மாநில அரசின் பொதுப்பணித்துறை திட்டங்கள் பலவற்றை எடுத்து செயல்படுத்தி வருகிறது. இந்நிறுவனத்திடம் இருந்து முறைகேடான வகையில் எடியூரப்பா குடும்பத்தினர் பல கோடி ரூபாய் பணம் பெற் றதை அம்பலப்படுத்தியது.கட்டுமான நிறுவன அதிகாரிகளுடன் எடியூரப்பா குடும்ப உறுப்பினர்கள் நடத்திய வாட்ஸ்-அப் சாட் மற்றும் இவர்களுக்குஇடையே பணப் பரிவர்த்தனை நடந்த வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களையும் டிவி சேனலில் ஒளிபரப்பியது.இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. டிவி சேனலில் வெளியானஊழல் முறைகேடுகள் தொடர் பாக, எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரிக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கைவிடுத்தன. உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இதனிடையே கட்டுமான நிறுவனம் ஒன்று புகார் அளித்ததாக கூறி, கடந்த 2 நாட்களுக்குமுன்பு டி.வி. சேனல் நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் புகுந்த கர்நாடக போலீசார், விடிய விடிய சோதனைநடத்தி அங்கிருந்த லேப்டாக் கள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவற்றை அள்ளிச் சென்றுள் ளனர். சம்பந்தப்பட்ட டிவி சேனலின் முகநூல் மற்றும் யூ-டியூப்பக்கங்களையும் முடக்கியுள்ளனர்.போலீசாரின் ரெய்டு, தங்கள்சேனலை மூடச் செய்வதற்கான முயற்சி என்றும், தனது மகன்செய்த ஊழல்களை மறைக்கும்வகையில் முதல்வர் எடியூரப்பாதனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் டிவிசேனலின் தலைமை செய்தியாளர் ராகேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.