tamilnadu

img

தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள் அதிகம்...

புதுதில்லி:
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2018ஆம் ஆண்டின் அறிக்கையின்படி என்கவுண்ட்டர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட  விசாரணைகளில் ஒரு போலீசாருக்கு கூட தண்டனைகிடைக்கவில்லை. 2018 ஆம் ஆண்டில் மொத்தம் 70 காவல் நிலைய  மரணங்கள் பதிவாகியுள்ளன, அவர்களில் பெரும்பாலோர் அதாவது 46 பேர் சிறையில் இல்லை. குஜராத்தில் 14 மரணங்கள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 12, ஆந்திராவில் 11, மகாராஷ்டிராவில் 7, இராஜஸ்தானில் 5, மத்தியப் பிரதேசத்தில் 4, அசாம், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில்  தலா 2 பேர் இறந்துள்ளனர். 

பஞ்சாப் மற்றும் தெலுங்கானா, பீகார்,ஜார்க்கண்ட் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தலா ஒருவர் காவல்துறையினர் காவலில் இறந்துள்ளனர்.மொத்த வழக்குகளில், குஜராத்தில் எட்டு,ஆந்திராவில் ஐந்து, தமிழ்நாட்டில் மூன்று, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் தலா இரண்டுமற்றும் அசாமில் ஒரு வழக்குகளில் மட்டுமேமாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிமன்ற காவலில் இல்லாத மற்றும் காவல்துறையினரின் காவலில் இறந்த 46 சம்பவங்களில் 29 சம்பவங்களில் மட்டுமே கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 13 காவல்துறையினர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது. 23 பேர்கைது செய்யப்பட்ட ஐந்து சம்பவங்களில் மட்டுமே குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுளது.

ஆனால் அந்த வழக்குகளிலும்எந்த ஒரு காவலரும் குற்றவாளி என தீர்மானிக்கப்படவில்லை. காவல்துறை, நீதித்துறை காவலில் நடைபெற்ற 24 மரணங்களில், 15கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றமற்றவர்கள் எனக் கூறப்பட்டது.என்.சி.ஆர்.பி.யின் (தேசிய புலனாய்வு குற்றப்பதிவேடு ஆவணக் காப்பக) தகவல்படி,அதிக எண்ணிக்கையிலான காவல் இறப்புகள்(32) நோய் காரணமாக நிகழ்ந்துள்ளன.  தற்கொலைகள் 17 நிகழ்ந்துள்ளது. தப்பிக்கும் போது ஏழு பேர் இறந்துள்ளனர், ஏழு பேர் ஏற்கனவே ஏற்பட்ட காயங்கள் காரணமாக இறந்துள்ளனர். காவல்துறையினரால் ஏற்பட்டகாயங்கள் காரணமாக மூன்று பேர் மட்டுமே இறந்துள்ளனர். ஒரு விசாரணை சிறைவாசி சாலை விபத்தில் இறந்தார், மேலும் மூன்று சிறைவாசிகள் இறந்ததற்கான காரணத்தை அறிய முடியவில்லை.காவல்துறையினரால் மனித உரிமைகள் மீறப்பட்டதாக 89 வழக்குகள் உள்ளன, அவற்றில் எதிலுமே காவலர்கள் குற்றவாளிகள் அல்ல. இதில் நான்கு என்கவுண்ட்டர்கள், மூன்று காவலில் இருந்தபோது நிகழ்ந்த மரணங்கள், மூன்று காவல்துறை சித்ரவதைவழக்குகள்,  17  வழக்குகள் காவல்துறை ஊழியர்களால் மிரட்டி பணம் பறிக்கப்பட்டதாகும், ஒரு சட்டவிரோத தடுப்புக்காவல் மற்றும் 61 வழக்குகள் அடங்கும்.

;