tamilnadu

img

கொரோனா சிகிச்சைக்கு ‘பிளாஸ்மா வங்கி’

புதுதில்லி, ஜூன் 29- தில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய  திட்டமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பிளாஸ்மா  வங்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த பிளாஸ்மா வங்கி தில்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் அமைக்கப்படும். பிளாஸ்மா தேவைப் படும் எவருக்கும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இந்த வங்கியிலிருந்து வழங்கப்படும் .இந்த முறைக்கு சில நாட்களில் உதவி எண்களை அறிவிப்போம். அடுத்த இரண்டு நாட்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

;