போபால்:
தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டையில் திரைப்பிரபலங்களின் புகைப்படங் களை வைத்து மோசடி அரங் கேற்றப்பட்டு உள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித் திட்டம்மத்திய அரசால் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க் கால்களை தூர் வாருதல் உள்ளிட்டபல்வேறு பணிகள் மேற்கொள் ளப்படுகின்றன. இதன்மூலம் குறைந்தபட்ச வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. வேலை
செய்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 229 கூலி வழங்கப் பட்டு வருகிறது.சில இடங்களில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தில் போலியான பயனாளிகளைச் சேர்த்து, நடக்காத வேலைக்கு பணம் செலவிட்டதாக கூறி ஊழல் முறைகேடு செய் வதும் நடந்து வருகிறது.அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் சோனு ஷாந்திலால்என்பவரது அடையாள அட்டையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதேபோல், மோனு துபே என்பவரது அடையாள அட்டையிலும் தீபிகா படுகோனேவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள் ளது.இதுகுறித்து மோனு துபேகூறுகையில், தீபிகா படுகோனேவின் புகைப்படம் அடையாள அட்டையில் இடம்பெற்றதில் இருந்து தனது பெயரில் ரூ. 30 ஆயிரம் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஒவ்வொரு மாதமும் இது தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோன்று வேறு சிலரதுஅடையாள அட்டையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட நடிகையரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.