tamilnadu

img

நாளை முதல் 7 ஆம் கட்ட  விமான சேவை தொடக்கம்

புதுதில்லி:
வந்தே பாரத் திட்டத்தின் கீழ், அக்டோபர் 29 ஆம் தேதி முதல் 7 ஆம் கட்ட சேவை தொடங்க உள்ளது.வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில் இப்பணியின் 7 ஆம் கட்டம் அக்டோபர் 29 அன்று தொடங்குவதாக மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சத்துக்கும் அதிகமானோர் பல்வேறு நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலமாக திருப்பி அழைத்து வரப்பட்டனர். வந்தே பாரத் திட்டத்தின் ஏழாவது கட்டம் அக்டோபர் 29ஆம்தேதி தொடங்க உள்ளது. அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் திருச்சி - மஸ்கட் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானங்களை இயக்குகிறது. நவம்பர் 16ஆம் தேதி திருச்சி-பஹ்ரைன் இடையே சிறப்பு விமானம் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்  தெரிவித்தார்.