நாடு முழுவதும் சுய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தில்லி ஷாகின் பாக் பகுதியில் பெட்ரோல் குண்டுவீசப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள ஷாகின் பாக் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும், ஷாகீன் பாக் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக்காரர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் போராட்டம் நடக்கும் இடம் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. காலை 9.30 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது . இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெட்ரோல் நிரப்பப்பட்ட 5 பாட்டில்களை நிகழ்விடத்தில் கைப்பற்றினர்.