tamilnadu

img

பரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு: வைகோ தாக்கல் செய்தார்

சென்னை, செப்.11- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூர் அப்துல்லாவை கண்டுப்பிடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணாவின் 111ஆவது பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள  ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது, காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுளள்னர். அவர்களை தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே, உச்சநீதிமன்றத்தில் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில் புதனன்று(செப்.11) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தில் இந்த  மனுவிரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;