புதுதில்லி,நவ.24- மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்த விவ காரத்தில் ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதத்தையும் பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்த எம்எல்ஏ க்களின் கடிதங்களையும் இன்று (திங்கள்) தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத பாஜகவை, ஆளுநர் ஆட்சி யமைக்க அழைப்பு விடுத்த நட வடிக்கையை அரசியல் கட்சி யினர் விமர்சித்து வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சராக அஜித் பவார் ஆகிய இருவரையும் பதவி ஏற்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைத்ததை எதிர்த்து ‘மகா விகாஸ் அகாதி’ என்ற கூட் டணியை அமைத்துள்ள சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் சார்பில் கூட்டாக சனிக்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி கள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஞாயிறன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறி ஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாஜக தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர்.
ஆளுநரின் செயல் விநோதமானது
முதலில் மனுதாரர் சார்பில் கபில்சிபல் வாதிடுகையில், ஞாயிற்றுக்கிழமை உங்களை தொந்தரவு செய்வதற்கு முதலில் மன்னிப்புக் கோருகிறேன். இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி. மகா ராஷ்டிராவில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்துபோய் விட்டது. எனவே அதுபற்றி இந்த வழக்கில் பேசவேண்டியதில்லை. தேர்தலுக்குப் பிறகான கூட்டணி உருவாக்கப்பட்டு அதன் முதல்வர் பொறுப்புக்கான முன்மொழிவாக உத்தவ் தாக்கரே ஏற்கனவே அறி விக்கப்பட்டுள்ளார். அவர்களுக்கு போதுமான பெரும்பான்மையும் உள்ளது. இந்நிலையில் மகா ராஷ்டிர மாநில ஆளுநரின் செயல் என்பது விநோதமானது மட்டுமல்ல; யாருடைய உத்தரவு களின், வழிகாட்டுதலின்படி ஆளுநர் செயல்பட்டு வந்திருக் கிறார் என்ற தோற்றத்தை அவரது செயல்பாடுகள் எடுத்துக் காட்டு கின்றன. அவர்களுக்குப் பெரும்பான்மை இருந்தால், இருப்பதாக அவர்கள் நம்பினால் இன்றே அவர்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திக் காண்பிக்க வேண்டும் என்று கூறி னார்.
பாஜகவுக்கு நீதிபதிகள் குட்டு
அப்போது பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி குறுக்கிட்டு பேசுகையில், இந்த வழக்கை இன்று இவ்வளவு அவசர மாக விசாரிக்க வேண்டிய அவ சியமே இல்லை” என்று கூறினார். நீதிபதிகள் அவரைப் பார்த்து, “வழக்கை எப்போது விசாரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லா தீர்கள். தலைமை நீதிபதி பட்டிய லிட்டு எங்களை விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்” என்று பதிலளித்தனர். மேலும் கபில் சிபல் கூறுகை யில், ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றாலோ, நீக்க வேண்டும் என்றாலோ மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுத் திருக்க வேண்டும். அப்படி நடந்ததா? குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்கக் கோரி ஆளுநர் அளித்த பரிந்துரை பாரபட்ச மானதாக உள்ளது. இது எல்லாமே தில்லியில் இருந்து சென்ற உத்தர வுகள் மூலம் ஆளுநர் செயல் பட்டிருக்கிறார் என்பதை தெளி வாக்குகிறது. எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. எனவே மகாராஷ்டிர சட்டமன்றத்தை உடனே கூட்டி பட்னாவிஸ் பெரும் பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆவணங்களின் மூலமாக ஆளுநர் முடிவெடுத்தாரா?
தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறி ஞர் அபிஷேக் சிங்வி கூறுகை யில், அரசு அமைப்போருக்கு தேவையான பெரும்பான்மை யான ஆதரவு இருக்கிறதா என்று ஆவண ரீதியாக திருப்தி அடைந்த பிறகே ஆளுநர் அரசமைக்க அழைக்க வேண்டும். ஆதரவுக் கடிதங்கள், எம்எல்ஏக்களின் கையெழுத்து, அவர்களின் வருகை பதிவு இவற்றின் மூலம் ஆளுநர் அந்த ஆவணங்களை உறுதிப்படுத்த வேண்டும். ஆனால் மகாராஷ்டிர ஆளுநர் இதுபோன்ற ஆவணங்களின் மூல மாக முடிவெடுத்தாரா? தேசிய வாத காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத் தில் 54 பேரில் 41 பேர் அஜித் பவாரை சட்டமன்றக் கட்சித் தலை வர் பதவியில் இருந்து நீக்கிய ஆவணத்தில் கையெழுத் திட்டுள்ளனர். இந்நிலையில் அஜித் பவார் எப்படி துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் பட்டிருக்க முடியும்? ஏற்கனவே பாஜகவை ஆட்சி யமைக்க ஆளுநர் அழைத்தும், தங்களுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி அதை தவிர்த் தார் பட்னாவிஸ். ஆனால் நேற்று காலை அவசர அவசரமாக ஆளுநர் எந்த அடிப்படையில் பட்னா விசுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? எனவே இதில் தீர்வு காண சிறந்த வழி உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்டி பட்னா விஸ் பெரும்பான்மையை நிரூ பிக்க உத்தரவிட வேண்டும். இல்லையெனில் குதிரை பேரத்து க்குதான் அது வழிவகுப்பது போல அமையும் என்று தெரிவித்தார்.
ஆளுநருக்குத்தான் அதிகாரமாம்!
பாஜக சார்பில் முகுல் ரோத்தகி கூறுகையில், மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஓர் அரசு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் இப்படி ஒரு விசாரணையே தேவையில்லை. கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் இதுபோன்று உச்சநீதிமன்றத்துக்கு வந்த போது, உச்சநீதிமன்றம் அவர் களை அந்த மாநில உயர்நீதி மன்றத்துக்கு செல்லுமாறு கூறியது. எனவே மனு தாரர்கள் முதலில் மும்பை உயர் நீதிமன்றத்தைத்தான் அணுகியிருக்க வேண்டும். மேலும் ஆளுநரின் முடிவில் யாரும் தலையிட முடியாது. வேண்டுமென்றால் பெரும் பான்மையை நிரூபிக்கச் சொல்லிதான் கேட்க முடி யுமே தவிர ஆளுநரை கேள்வி கேட்க முடியாது. ஆளுநர் திருப்தி அடைந்தால் ஆட்சி அமைக்க அழைக்க முடியும் என்று தெரிவித்தார். மத்திய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகை யில், சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு ஆட்சி அமைக் கும் அடிப்படை உரிமை கிடையாது. எனவே உச்சநீதி மன்றம் இன்றே இதில் உத்த ரவு பிறப்பிக்க எந்த அவசர மும் இல்லை என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதி பதிகள், 3 கட்சிகளின் மனு தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் திங்களன்று பதி லளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கான கடிதம் மற்றும் எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்தனர் என்பதற்கான ஆவணங்களையும் சொலி சிட்டர் ஜெனரல் திங்கள் காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதி பதிகள் உத்தரவிட்டனர். உரிய உத்தரவுகள் திங்கள் (இன்று) பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.