tamilnadu

img

பாஸ்போர்ட் காலாவதியை   நினைவுபடுத்த புதிய சேவை அறிமுகம்

புதுதில்லி:
பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதி குறித்து, பயனாளிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் நினைவுபடுத்தும் புதிய சேவையை பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கியுள்ளன.பத்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் தற்போது பாஸ்போர்ட் அளிக்கப்படுகிறது.இதனால் காலாவதி ஆகும் நிலையில்பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறந்துவிட்ட பலர், வெளிநாடுக்கு செல்வதில் பிரச்னையை சந்திக்கின்றனர். இந்நிலையில், பாஸ்போர்ட் காலாவதியாகும் தேதியிலிருந்து 9 மாதத்துக்கு முன்பும், 7 மாதத்துக்கு முன்பும் பயனாளிகளின் பதிவு  செய்யப்பட்ட எண்ணுக்கு 2 முறை எஸ்எம்எஸ் அனுப்பி நினைவுபடுத்தும் சேவையை பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கியுள்ளன.

;