tamilnadu

img

பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு!

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஏற்கெனவே சீனாவுடன் பதற்ற நிலை நீடித்து வரும் சூழலில் பாகிஸ்தான் ராணுவமும் அவ்வப்போது அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிரிஷ்ண காடி பிரிவில் வியாழனன்று இரவு 10 மணியளவில், பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி, பாகிஸ்தான் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.

;