tamilnadu

img

வெளிநாட்டு நிதியை பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிராக போராடக்கூடாது... விதிகளில் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவு...

புதுதில்லி:
வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. இதில் வெளிநாட்டு நிதியை பெறும் அமைப்புகள்  அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இயங்கி வரும் பல்வேறு தனியார் அமைப்புகள், கல்வி, ஆன்மீகம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு செயல்களுக்காக வெளிநாடுகளிலிருந்து நிதி உதவிகளை பெற்று வருகின்றன.இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான வழிமுறைகளில் தற்போது மத்திய அரசு சில மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டு நிதி உதவி பெறும் அமைப்புகள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளில் பங்கேற்கும் விவசாயிகள் மற்றும் மாணவர்சங்கங்கள் நிதி உதவியை பெற முடியாது.வெளிநாட்டு நிதி பெற விரும்பும் அமைப்புகள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள்செயல்பட்டிருக்க வேண்டும். அந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தது ரூ.15 லட்சத்தை நலத்திட்டத்திற்காக செலவிட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.