புதுக்கோட்டை;
மருத்துவ படிப்புக்கான ஆன்-லைன் விண்ணப்பத்தில் தவறு இருந்தால் திருத்திக்கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகா தாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மருத்துவப்படிப்புக்கான ஆன்-லைன் விண்ணப்பம் கடந்த 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மாணவ-மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதுவரை 27 ஆயிரத்து 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பத்தில் ஒரு சிலவற்றை தவறாக குறிப்பிட்டு விண்ணப்பித்திருந்தால் மெயில் மூலம் தகவல் தெரிவிக்கலாம். யாரும் பயப்பட, பதற்றப்பட தேவையில்லை. தவறை சரி செய்துகொள்ள வாய்ப்பும், அவகாசமும் வழங்கப்படும். நவம்பர் 12 வரை விண்ணப் பிக்கலாம். அதன்பின் பரிசீலனைக்கு பின்னர்16 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப் படும். அதன்பின் ஓரிரு நாட்களில் கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.