tamilnadu

img

உ.பி.யில் தொடரும் கொடூரம் : 3 சிறுமிகள் மீது ஆசிட் வீச்சு...

லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் கொடூரமாகபாலியல் வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் கொந்தளிப்பு இன்னும் அடங்காத நிலையில் மேலும் ஒரு கொடூரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பாஸ்கா கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூன்று சகோதரிகள் மீது ஆசிட் வீசப்பட்டது. 8, 12, மற்றும் 17 வயதுடைய இந்த சிறுமிகள் அடையாளம் தெரியாத நபரால் ஆசிட் தாக்குலுக்கு உள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கோண்டா போலீசார்  யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று சகோதரிகளும் தோபி சமூகத்தைச்சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் தாழ்த்தப்பட்டசமூக பிரிவின் கீழ் வருவதாகவும் காவல் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.