tamilnadu

img

கூடங்குளத்தில் அணுக் கழிவுகளை  சேமிப்பதால் எந்த பாதிப்பும் இல்லையாம்  மத்திய அரசு கூறுகிறது

 புது தில்லி,ஜூன் 27- கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதால் எந்த  பாதிப்பும் ஏற்படாது என்று மாநி லங்களவையில் எழுத்துப்பூர்வ மான பதிலில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் வியாழ னன்று சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப் பூர்வ மாக அளித்த பதிலில், கூடங் குளம் பகுதியில் அணுக் கழிவு களை சேமிப்பதால் எந்த பாதிப் பும் ஏற்படாது. அணு உலைக் கழிவு மேலாண்மை ஆணையம் 2013 ஆம் ஆண்டிலிருந்து செயல் பட்டு வருகிறது. சேமித்து வைக்கும் அணுக் கழிவுகள், நாளாக நாளாக வீரியம் குறைந்து விடும்.  எனவே, கூடங்குளம் அணுக் கழிவுகளை சேமித்து வைப்ப தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. கூடங்குளம் அணு ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே குறிப்பிட்ட அளவில்தான் அணுக் கதிர்வீச்சு உள்ளது என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.