tamilnadu

img

அனைத்து மதத்தினருக்கும் என்ஆர்சி எதிரானது...

உத்தவ் தாக்கரே பேட்டி 

மும்பை, பிப்.6- தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அனைத்து மதத்தின ரையும் பாதிக்கும் என்பதால், அதனை மகாராஷ்டிர மாநிலத் தில் அனுமதிக்க முடியாது என்று அம்மாநில முதல்வரும், சிவ சேனா தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ நாளே டான சாம்னாவுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தில் இருந்து சட்டவிரோத மாக குடியேறியவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என் பது சிவசேனாவின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்திய குடி மக்களை நாட்டில் இருந்து வெளி யேற்ற முடியாது என்பதை நான் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்.  ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்துக்களையும், முஸ்லிம்களையும் பாதிக்கும். இதன் மூலம் இந்துக்கள் உள்பட அனைத்து மத குடிமக்களும் தங்களது குடியுரிமையை நிரூ பிக்க வேண்டும். அசாமில், 19 லட் சம் பேரால் தங்களது குடியுரிமை யை நிரூபிக்க முடியவில்லை. இவர்களில் 14 லட்சம் பேர் இந்துக் கள். தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் அதனை ஆதரிப்பவர்களும் பாதிக்கப்படு வார்கள். எனவே, இதுதொடர்பாக சட்டம் இயற்றுவதை, நான் அனு மதிக்க மாட்டேன். நான் முதல்வ ராக இருந்தாலும், இல்லாவிட்டா லும் யாருக்கும் அநீதி ஏற்படு வதை அனுமதிக்க மாட்டேன்.  இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.