tamilnadu

img

கோவிட் காலத்தில் பணிக்கு வராத 432 மருத்துவர்கள், ஊழியர்கள் பணி நீக்கம்

திருவனந்தபுரம்:
கேரளத்தில் சட்டவிரோதமாக பணிக்கு வராத 385 மருத்துவர்கள் உட்பட மொத்தம்432 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதிலும் திரும்பி வராத அவர்கள் சுகாதாரத் துறையிலிருந்து நீக்கப்பட்டதாக அமைச்சர் கே.கே.சைலாஜா தெரிவித்தார்.

கோவிட் காலத்தில் சுகாதாரத் துறையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் சேவைகள் அவசியம். தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க ஆயிரக்கணக்கான சுகாதார ஊழியர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். ஆனாலும் மேற்கண்டவர்கள் மருத்துவ சேவைக்கு திரும்பவில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றால், ஊழியர்கள் சுகாதாரத் துறையிலிருந்து விலகி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முன்னதாக, மருத்துவக் கல்வித் துறையில் 36 மருத்துவர்கள் சட்டவிரோதமாக, வேலை செய்யாமல் இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்ட னர் என அமைச்சர் கூறினார்.